என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கருத்துக்கணிப்புகளை தகர்த்து களத்தில் வென்ற பாஜக-ஜேடியு... வாக்குகளை பிரித்த சிரக் பஸ்வான்
Byமாலை மலர்11 Nov 2020 4:28 AM GMT (Updated: 11 Nov 2020 7:07 AM GMT)
பீகார் தேர்தலில் ஜேடியு கட்சிக்கு எதிராக லோக் ஜனசக்தி கட்சி வேட்பாளர்களை நிறுத்தியதால் சுமார் 75 தொகுதிகளில் ஜேடியு கட்சியின் வெற்றி வாய்ப்பு பாதிக்கப்பட்டது.
பாட்னா:
பீகார் சட்டமன்றத் தேர்தல் மூன்று கட்டங்களாக நடந்து முடிந்த நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் பெரும்பாலும் பாஜக-ஜேடியு கூட்டணிக்கு எதிராகவே இருந்தன. நேற்று வாக்கு எண்ணிக்கை தொடங்கியபோதும் பாஜக-ஜேடியு உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய தேசிய ஜனநாயக கூட்டணிக்கும், ஆர்ஜேடி, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளைக் கொண்ட மெகா கூட்டணிக்கும் இடையிலான இடைவெளி குறைவாகவே இருந்தது. மதியத்திற்கு பிறகு முன்னிலை நிலவரம் மாறியது.
கருத்துக்கணிப்புகளை தகர்த்து பாஜக-ஜேடியு கூட்டணி ஆட்சியமைக்க தேவையான இடங்களை விட அதிக இடங்களில் முன்னிலை பெற்றது. வாக்கு எண்ணிக்கை இன்று அதிகாலை முடிவடைந்த நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணி 125 தொகுதிகளில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. மெகா கூட்டணிக்கு 110 இடங்களே கிடைத்தன.
தேசிய ஜனநாயக கூட்டணியைப் பொருத்தவரை பாஜக 74 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. நிதிஷ் குமார் தலைமையிலான ஜேடியு 43 தொகுதிகளை மட்டுமே பிடித்தது. இதன்மூலம் கூட்டணியில் பாஜக மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது. இதில் லோக் ஜனசக்தி முக்கிய பங்காற்றி உள்ளது.
தேர்தலுக்கு சில வாரங்களுக்கு முன்பு தேசிய ஜனநாயக கூட்டணியை விட்டு பிரிந்து தனித்து களமிறங்கிய லோக் ஜனசக்தி, நிதிஷ் குமாருக்கு எதிராக வேட்பாளர்களை நிறுத்தி பிரச்சாரம் செய்தது. அதேசமயம் பாஜக போட்டியிடும் தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தவில்லை.
இந்த தேர்தலில் சிரக் பஸ்வானின் லோக் ஜன சக்தி கட்சி 137 தொகுதிகளில் போட்டியிட்டபோதும் ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றது. இது கட்சியின் வரலாற்றில் மிகவும் மோசமான தோல்வியாக பார்க்கப்படுகிறது. ஆனால் ஜேடியு கட்சிக்கு எதிராக வாக்காளர்களை நிறுத்தியதால், சுமார் 75 தொகுதிகளில் ஜேடியு கட்சியின் வெற்றி வாய்ப்பு கடுமையாக பாதிக்கப்பட்டது.
இந்த தேர்தல் மூலம் நிதிஷ் குமார் தலைமையிலான ஜேடியு கட்சியின் செல்வாக்கை காலி செய்ய வேண்டும் என்ற திட்டத்தை சிரக் பஸ்வானின் லோக் ஜனசக்தி வெற்றிகரமாக நிறைவேற்றியிருப்பதாக அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். அதேசமயம், சிரக் பஸ்வானின் அரசியல் எதிர்காலம் பாஜகவை சார்ந்து இருப்பதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X