என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இடைத்தேர்தலில் பாஜகவை ஆதரித்த வாக்காளர்களுக்கு நன்றி: நளின்குமார் கட்டீல்
Byமாலை மலர்11 Nov 2020 1:59 AM GMT (Updated: 11 Nov 2020 1:59 AM GMT)
இடைத்தேர்தலில் பா.ஜனதாவை ஆதரித்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிப்பதாக அக்கட்சியின் தலைவர் நளின்குமார் கட்டீல் கூறினார்.
பெங்களூரு :
கர்நாடக சட்டசபை இடைத்தேர்தலில் பா.ஜனதா வெற்றி பெற்று இருப்பது குறித்து அக்கட்சியின் மாநில தலைவர் நளின்குமார் கட்டீல் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
இடைத்தேர்தலில் 2 தொகுதிகளிலும் எங்கள் கட்சி வெற்றி பெற்றுள்ளது. பிரதமர் மோடி, முதல்-மந்திரி எடியூரப்பாவின் செயல்பாடுகள், அவர்கள் செயல்படுத்திய திட்டங்களை வாக்காளர்களிடம் எடுத்துக் கூறினோம். எங்கள் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கடுமையாக உழைத்தனர். ஆர்.ஆர்.நகரில் நாங்கள் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருந்தது. முனிரத்னா ஏற்கனவே அந்த தொகுதியில் சிறப்பான முறையில் சேவையாற்றியுள்ளார்.
சிரா தொகுதியில் காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சிகள் பல ஆண்டுகளாக வெற்றி பெற்றுள்ளன. ஆனால் அந்த கட்சிகள் அந்த தொகுதியின் வளர்ச்சிக்கு எதையும் செய்யவில்லை. நாங்கள் அங்கு தேர்தல் பணியாற்ற விஜயேந்திரா உள்ளிட்ட நிர்வாகிகளை நியமனம் செய்தோம். அவர்கள் தீவிரமாக பிரசாரம் மேற்கொண்டனர். வாக்காளர்களை சந்தித்து அவர்களிடையே பா.ஜனதா குறித்து நம்பிக்கையை ஏற்படுத்தினர்.
சிராவில் 20 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் எங்கள் கட்சி வேட்பாளர் வெற்றி பெறுவார் என்ற நம்பிக்கை இருந்தது. அதன்படி அங்கு எங்களுக்கு வெற்றி கிடைத்துள்ளது. பா.ஜனதாவுக்கு ஆதரவு வழங்கிய வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். கட்சியின் வெற்றிக்காக உழைத்த நிர்வாகிகளுக்கு எனது பாராட்டை தெரிவிக்கிறேன்.
இவ்வாறு நளின்குமார் கட்டீல் கூறினார்.
கர்நாடக சட்டசபை இடைத்தேர்தலில் பா.ஜனதா வெற்றி பெற்று இருப்பது குறித்து அக்கட்சியின் மாநில தலைவர் நளின்குமார் கட்டீல் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
இடைத்தேர்தலில் 2 தொகுதிகளிலும் எங்கள் கட்சி வெற்றி பெற்றுள்ளது. பிரதமர் மோடி, முதல்-மந்திரி எடியூரப்பாவின் செயல்பாடுகள், அவர்கள் செயல்படுத்திய திட்டங்களை வாக்காளர்களிடம் எடுத்துக் கூறினோம். எங்கள் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கடுமையாக உழைத்தனர். ஆர்.ஆர்.நகரில் நாங்கள் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருந்தது. முனிரத்னா ஏற்கனவே அந்த தொகுதியில் சிறப்பான முறையில் சேவையாற்றியுள்ளார்.
சிரா தொகுதியில் காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சிகள் பல ஆண்டுகளாக வெற்றி பெற்றுள்ளன. ஆனால் அந்த கட்சிகள் அந்த தொகுதியின் வளர்ச்சிக்கு எதையும் செய்யவில்லை. நாங்கள் அங்கு தேர்தல் பணியாற்ற விஜயேந்திரா உள்ளிட்ட நிர்வாகிகளை நியமனம் செய்தோம். அவர்கள் தீவிரமாக பிரசாரம் மேற்கொண்டனர். வாக்காளர்களை சந்தித்து அவர்களிடையே பா.ஜனதா குறித்து நம்பிக்கையை ஏற்படுத்தினர்.
சிராவில் 20 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் எங்கள் கட்சி வேட்பாளர் வெற்றி பெறுவார் என்ற நம்பிக்கை இருந்தது. அதன்படி அங்கு எங்களுக்கு வெற்றி கிடைத்துள்ளது. பா.ஜனதாவுக்கு ஆதரவு வழங்கிய வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். கட்சியின் வெற்றிக்காக உழைத்த நிர்வாகிகளுக்கு எனது பாராட்டை தெரிவிக்கிறேன்.
இவ்வாறு நளின்குமார் கட்டீல் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X