என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பெங்களூருவில் பிளாஸ்டிக் தொழிற்சாலையில் தீவிபத்து - கரும்புகையால் வீட்டைவிட்டு வெளியேறிய மக்கள்
Byமாலை மலர்10 Nov 2020 11:38 PM GMT (Updated: 10 Nov 2020 11:38 PM GMT)
பெங்களூருவில் தனியார் பிளாஸ்டிக் தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் ரூ.45 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது.
பெங்களூரு:
பெங்களூரு பேடராயனபுரா போலீஸ் எல்லைக்கு உட்பட்ட ஒசகுட்டதஹள்ளி அருகே பாபுஜிநகர் 1-வது மெயின் ரோட்டில் ஆயாஷ் பாஷா என்பவருக்கு சொந்தமான பிளாஸ்டிக் தொழிற்சாலை உள்ளது.
இந்த தொழிற்சாலையில் உள்ள மற்றொரு கட்டிடம் குடோனாக மாற்றப்பட்டு சச்சான் என்பவர் கிருமி நாசினிகள் மற்றும் ரசாயன பொருட்கள் அடங்கிய பேரல்களை வைத்திருந்தார்.
நேற்று காலை பிளாஸ்டிக் தொழிற்சாலையில் 4 தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருந்தனர். காலை 11 மணியளவில் தொழிற்சாலையில் இருந்த குடோனில் திடீரென தீப்பிடித்தது.
அந்த தீ மளமளவென அங்கிருந்த பொருட்களில் பிடித்து எரியத்தொடங்கியது. குறிப்பாக, ரசாயன பொருட்களிலும் தீப்பிடித்தது. இதை பார்த்து 4 தொழிலாளர்களும் அதிர்ச்சி அடைந்தார்கள். உடனடியாக அவர்கள் தொழிற்சாலையில் இருந்து வெளியே ஓடிவந்து விட்டனர்.
ரசாயன பொருட்களில் தீப்பிடித்ததால் தொழிற்சாலையில் இருந்து விண்ணை முட்டும் அளவுக்கு கரும்புகை வெளியேறிய வண்ணம் இருந்தது.
தகவலறிந்து 20-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களில் தீயணைப்பு படைவீரர்கள் விரைந்து வந்தனர். தொழிற்சாலையில் பிடித்த தீயை அணைக்க தீயணைப்பு படைவீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்தார்கள்.
தொழிற்சாலையில் இருந்து கரும்புகை தொடர்ந்து வெளியேறியதால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக மாறியது. இதனால் முன் எச்சரிக்கையாக அப்பகுதியில் வசிப்பவர்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியேறினார்கள்.
ஒரு வழியாக நேற்று இரவு தொழிற்சாலையில் பிடித்த தீ முற்றிலும் அணைக்கப்பட்டது. தொழிற்சாலையில் இருந்த பிளாஸ்டிக் பொருட்கள், குடோனில் இருநத கிருமி நாசினி பேரல்கள், ரசாயன பொருட்கள் அடங்கிய பேரல்கள் அனைத்தும் எரிந்து நாசமானது. தீ விபத்திற்கான காரணம் என்ன? என்பது தெரியவில்லை.
இந்த தீ விபத்தில் தீயணைப்பு படைவீரர்கள் 4 பேர் படுகாயம் அடைந்தனர். சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் பெங்களூருவில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X