என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பீகார் முதல்வராக மீண்டும் பதவி ஏற்றால் நிதிஷ்குமார் சிவசேனாவுக்கு நன்றிசொல்ல வேண்டும் - சஞ்சய் ராவத்
Byமாலை மலர்10 Nov 2020 9:59 PM GMT (Updated: 10 Nov 2020 9:59 PM GMT)
பீகாரில் நிதிஷ்குமார் மீண்டும் முதல்-மந்திரியாக பதவி ஏற்றால் அவர் நிச்சயம் சிவசேனாவுக்கு நன்றி சொல்ல வேண்டும் என்று சஞ்சய் ராவத் கூறினார்.
மும்பை:
மகாராஷ்டிரா சட்டசபைக்கு கடந்த ஆண்டு நடந்த தேர்தலில் கூட்டணி கட்சிகளான பா.ஜ.க. 105 இடங்களிலும், சிவசேனா 56 இடங்களிலும் வெற்றி பெற்றன. முதல் மந்திரி பதவியை சுழற்சி முறையில் இரு கட்சிகளும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று சிவசேனா பிடிவாதமாக இருந்ததால், அக்கட்சிகளின் கூட்டணி முறிந்தது. யாரும் எதிர்பார்க்காத வகையில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரசுடன் கைகோர்த்து சிவசேனா ஆட்சி அமைத்தது.
இந்நிலையில், நேற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற பீகார் சட்டசபை தேர்தலில் முதல் மந்திரி நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதாதளத்தை விட அதன் கூட்டணி கட்சியான பா.ஜ.க. அதிக இடங்களை வென்றது. இது அரசியல் நோக்கர்களின் புருவத்தை உயர்த்தி இருப்பதோடு, நிதிஷ்குமாருக்கு முதல் மந்திரி பதவியை பா.ஜனதா விட்டுக் கொடுக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதுதொடர்பாக சிவசேனா கட்சியின் தலைமை செய்தி தொடர்பாளர் சஞ்சய் ராவத் நிருபர்களிடம் கூறியதாவது:
நிதிஷ்குமார் மீண்டும் முதல் மந்திரியாக பதவி ஏற்றால், அவர் நிச்சயம் சிவசேனாவுக்கு நன்றி சொல்லியாக வேண்டும். மகாராஷ்டிராவில் பா.ஜ.க.வை விட நாங்கள் குறைந்த இடத்தில் வெற்றி பெற்றாலும் முதல் மந்திரி பதவியை கோரினோம். ஆனால் வாக்குறுதியின்படி பா.ஜ.க. நடந்து கொள்ளவில்லை. அதே சூழல் தற்போது பீகார் தேர்தலில் வந்துள்ளது. கட்சி பலத்தை பார்க்காமல் நிதிஷ்குமாரை முதல் மந்திரி ஆக்குவோம் என்று பா.ஜ.க. முன்பு கூறியது. பீகாரில் அந்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் இருக்கமுடியாது. ஏனெனில் வாக்குறுதியை நிறைவேற்றாததால் மகாராஷ்டிராவில் என்ன நடந்தது என்பதை சிவசேனா காட்டி உள்ளது.
அதேவேளையில் 3 முறை முதல் மந்திரி பதவி வகித்த நிதிஷ்குமாரின் கட்சி, இந்த தேர்தலில் 3-வது இடத்துக்கு தள்ளப்பட்டது ஏன் என்று அவர் ஆராய்ந்து பார்க்க வேண்டும்.
பீகாரில் ராஷ்டிரீய ஜனதாதளம் கட்சியின் இளம் தலைவர் தேஜஸ்வி யாதவ், இந்த தேர்தலின் ஆட்ட நாயகன். பிரதமர் மற்றும் மத்திய மந்திரிகளின் தீவிர பிரசாரத்திலும், விரோத அரசியல் சூழ்நிலையிலும் 2-வது இடத்தை பெற்று மக்கள் மத்தியில் பளிச்சிட்டு உள்ளார். அவருக்கு எனது வாழ்த்துகள் என தெரிவித்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X