search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாதுகாப்பு படையினர்
    X
    பாதுகாப்பு படையினர்

    காஷ்மீர்: பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுண்டரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

    காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுண்டர் தாக்குதலில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் சோபியான் மாவட்டம் குட்புரா பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு இன்று ரகசிய தகவல் கிடைத்தது. 

    இதையடுத்து, அப்பகுதியை இன்று பாதுகாப்பு படையினர் சுற்றிவளைத்து தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது அங்கு பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.

    இதையடுத்து, சுதாரித்துக்கொண்ட பாதுகாப்பு படையினர் பயங்கரவாதிகளை நோக்கி பதில் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதனால், இரு தரப்புக்கும் இடையே கடுமையான துப்பாக்கி சண்டை நடந்தது.

    இந்த சண்டையில் பாதுகாப்பு படையினர் நடத்திய அதிரடி தாக்குதலில் 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்ட 2 பயங்கரவாதிகளின் பெயர், அவர்கள் எந்த இயக்கத்தை சேர்ந்தவர்கள் என்ற தகவல் தற்போதுவரை வெளியாகவில்லை.

    இந்த என்கவுண்டரில் கொல்லப்பட்ட பயங்கரவாதிகளிடம் இருந்து ஒரு ஏகே 47 ரக துப்பாக்கி, ஒரு கைத்துப்பாக்கி, கையெறி குண்டுகள் உள்பட பயங்கர ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன.
    Next Story
    ×