என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வு: பிரதமருக்கு மம்தா பானர்ஜி கடிதம்
Byமாலை மலர்10 Nov 2020 2:02 AM GMT
விண்ணை முட்டும் வகையில் உயர்ந்துவரும் அத்தியாவசிப் பொருட்களின் விலையைக் கட்டுப்படுத்த, பிரதமர் உடனடியாகத் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கொல்கத்தா :
மம்தா பானர்ஜி பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
‘அத்தியாவசியப் பொருட்களின் கடுமையான விலை உயர்வால் மக்கள் தற்போது மிகுந்த நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கின்றனர். இந்தப் பிரச்சினையின் தீவிரம் கருதி, மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து பதுக்கலை தடுக்கவும், வினியோகத்தை மேம்படுத்தவும் வேண்டும். அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வைக் கட்டுக்குள் கொண்டுவர வேண்டும்.
இல்லாவிட்டால், விவசாய விளைபொருட்களின் உற்பத்தி, வினியோகம், பங்கீடு, விற்பனையை கட்டுப்படுத்தும் மாநில அரசுகளின் அதிகாரத்தை திரும்ப அளிக்க வேண்டும். அதற்கு உரிய சட்டங்கள் இயற்றுவதற்கு மாநில அரசுகளை மத்திய அரசு அனுமதிக்க வேண்டும். உருளைக்கிழங்கு, வெங்காயம் போன்ற அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வால் மக்கள் மிகுந்த கஷ்டத்துக்கு ஆளாகியுள்ளனர்.
இந்நிலையில் மாநில அரசுகள் அதிகாரம் ஏதுமின்றி, மக்கள் படும் அவதியை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க முடியாது.’ என்று கூறியுள்ளார்.
அத்தியாவசியப் பொருட்களின் பட்டியலில் இருந்து தானியங்கள், பருப்புகள், எண்ணெய் வித்துகள், சமையல் எண்ணெய்கள், வெங்காயம், உருளைக்கிழங்கு ஆகியவற்றை நீக்குவதற்கான சட்டத்திருத்த மசோதா, கடந்த செப்டம்பர் 23-ந் தேதியன்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மம்தா பானர்ஜி பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
‘அத்தியாவசியப் பொருட்களின் கடுமையான விலை உயர்வால் மக்கள் தற்போது மிகுந்த நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கின்றனர். இந்தப் பிரச்சினையின் தீவிரம் கருதி, மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து பதுக்கலை தடுக்கவும், வினியோகத்தை மேம்படுத்தவும் வேண்டும். அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வைக் கட்டுக்குள் கொண்டுவர வேண்டும்.
இல்லாவிட்டால், விவசாய விளைபொருட்களின் உற்பத்தி, வினியோகம், பங்கீடு, விற்பனையை கட்டுப்படுத்தும் மாநில அரசுகளின் அதிகாரத்தை திரும்ப அளிக்க வேண்டும். அதற்கு உரிய சட்டங்கள் இயற்றுவதற்கு மாநில அரசுகளை மத்திய அரசு அனுமதிக்க வேண்டும். உருளைக்கிழங்கு, வெங்காயம் போன்ற அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வால் மக்கள் மிகுந்த கஷ்டத்துக்கு ஆளாகியுள்ளனர்.
இந்நிலையில் மாநில அரசுகள் அதிகாரம் ஏதுமின்றி, மக்கள் படும் அவதியை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க முடியாது.’ என்று கூறியுள்ளார்.
அத்தியாவசியப் பொருட்களின் பட்டியலில் இருந்து தானியங்கள், பருப்புகள், எண்ணெய் வித்துகள், சமையல் எண்ணெய்கள், வெங்காயம், உருளைக்கிழங்கு ஆகியவற்றை நீக்குவதற்கான சட்டத்திருத்த மசோதா, கடந்த செப்டம்பர் 23-ந் தேதியன்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X