என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இடைத்தேர்தலில் பாஜக வெற்றி பெறும் - முதல் மந்திரி எடியூரப்பா நம்பிக்கை
Byமாலை மலர்9 Nov 2020 12:25 AM GMT (Updated: 9 Nov 2020 12:25 AM GMT)
இடைத்தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெறும் என்று முதல் மந்திரி எடியூரப்பா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
பெங்களூரு:
கர்நாடக சட்டசபையில் காலியாக உள்ள ஆர்.ஆர்.நகர், சிரா ஆகிய தொகுதிகளுக்கு கடந்த 3-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் ஆளும் பா.ஜ.க, காங்கிரஸ், ஜனதா தளம்(எஸ்) ஆகிய கட்சிகளுக்கு இடையே மும்முனை போட்டி நிலவியது.
இதில் பதிவான வாக்குகள் நாளை (செவ்வாய்க்கிழமை) எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்படுகிறது. இதில் பா.ஜ.க. வெற்றி பெறும் என்று தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் தெரிவித்துள்ளன.
இந்நிலையில் இடைத்தேர்தல் நடைபெற்ற 2 தொகுதிகளிலும் பா.ஜ.க. வெற்றி பெறும் என்று முதல் மந்திரி எடியூரப்பா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:
இடைத்தேர்தல் நடைபெற்ற ஆர்.ஆர்.நகர், சிரா ஆகிய 2 தொகுதிகளிலும் பா.ஜ.க. வெற்றி பெறுவது உறுதி. ஆர்.ஆர்.நகரில் 35 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்திலும், சிராவில் 20 ஆயிரம் முதல் 25 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்திலும் பா.ஜ.க. வெற்றி பெறும் என்ற நம்பிக்கை உள்ளது. இதை நான் சொல்லவில்லை, இடைத்தேர்தலுக்கு முன்பும், தேர்தல் தினத்தன்றும் கூறினேன். நான் கூறிய இந்த கருத்தை காங்கிரஸ் மென்மையாக எடுத்துக் கொண்டது.
இடைத்தேர்தல் முடிவு வெளிவரும்போது, இதன் உண்மை நிலை அவர்களுக்கு தெரியவரும். காங்கிரஸ் வெற்றி பெறும் என்று சித்தராமையா கூறியுள்ளார். 10-ம் தேதி (நாளை) தேர்தல் முடிவு வெளிவரும்போது அவருக்கு யார் வெற்றி பெறுவார்கள் என்பது தெரியும். இருந்தாலும் அவருக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X