search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாஜக தலைவர் திலீப் கோஷ்
    X
    பாஜக தலைவர் திலீப் கோஷ்

    ’ஒழுங்கீனத்தில் ஈடுபடுபவர்களின் கை,கால்கள்,தலை உடைக்கப்படும்...கல்லறைக்கு அனுப்பப்படுவர்’ - பாஜக தலைவர் பேச்சு

    ஒழுங்கீன செயல்களில் ஈடுபடும் மம்தா பானர்ஜியின் ஆதரவாளர்கள் 6 மாதத்திற்குள் திருந்திக்கொள்ள வேண்டும் என மேற்குவங்காள பாஜக தலைவர் திலீப் கோஷ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
    கொல்கத்தா:

    294 தொகுதிகளை கொண்ட மேற்குவங்காள சட்டசபை தேர்தல் 2021-ம் ஆண்டு மே மாதம் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்கள் உள்ளபோதும் அரசியல் கட்சியினர் தற்போது முதலே பிரசார கூட்டங்களை நடத்தத்தொடங்கியுள்ளனர்.

    மேற்கு வங்காளத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சிக்கும், பாரதீய ஜனதா கட்சிக்கும் இடையே நேரடி போட்டி ஏற்பட உள்ளது.

    இந்த முறை மேற்குவங்காளத்தை கைப்பற்றிவிட வேண்டும் என்ற முனைப்புடன் பாஜக தற்போதே தேர்தல் பிரசார நிகழ்ச்சிகளில் ஈடுபடத்தொடங்கிவிட்டது. 

    பாஜகவின் தேசிய தலைவர் ஜேபி நட்டா, அமித்ஷா உள்ளிட்டோர் மேற்குவங்காளத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கட்சியை வலுப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அதேபோல், அம்மாநில பாஜக தலைவரான திலீப் கோஷும் தேர்தலை கருத்தில் கொண்டு பல்வேறு பகுதிகளில் பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டு கட்சியின் பலத்தை அதிகரிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்.

    இந்நிலையில், அம்மாநிலத்தில் பாஜக சார்பில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் மாநில பாஜக தலைவர் திலீப் கோஷ் பங்கேற்றார். நிகழ்ச்சியில் பேசிய பாஜக தலைவர் கோஷ் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்தார்.

    இது தொடர்பாக பாஜக தலைவர் திலீப் கோஷ் பேசுகையில், ‘மம்தா பானர்ஜியின் கட்சியினருக்கு (திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர்) நான் ஒன்றை கூறினேன். 

    ஒழுங்கீன செயல்களில் ஈடுபடுவர்கள் அவர்களாகவே 6 மாதத்திற்குள் தங்கள் ஒழுங்கீன செயல்களை திருத்திக்கொள்ள வேண்டும். அல்லது அவர்களின் (திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர்) கை, கால்கள், விலா எலும்புகள், தலைகள் உடைக்கப்படும்.

    நீங்கள் வீட்டிற்கு செல்லும் முன் மருத்துவமனைகு செல்ல வேண்டியிருக்கும். ஒரு வேளை அவர்கள் (திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர்) ஒழுங்கீன செயல்களை அதிகரித்தால் அவர்கள் கல்லறைக்கு அனுப்பப்படுவார்கள்’ என்று கூறி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.
    Next Story
    ×