search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா சோதனை
    X
    கொரோனா சோதனை

    கர்நாடகத்தில் 18 மாவட்டங்களில் கொரோனா உயிரிழப்பு இல்லை: சுகாதாரத்துறை தகவல்

    கர்நாடகத்தில் 18 மாவட்டங்களில் கொரோனாவுக்கு ஒருவர் கூட பலியாகவில்லை என்று சுகாதாரத்துறை வெளியிட்டு உள்ள தெரிவித்துள்ளது.
    பெங்களூரு :

    கர்நாடகத்தில் நேற்றைய கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-

    கர்நாடகத்தில் நேற்று முன்தினம் வரை 8 லட்சத்து 41 ஆயிரத்து 889 பேர் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டனர். நேற்று புதிதாக 2,258 பேருக்கு வைரஸ் தொற்று உறுதியானது. இதன்மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 8 லட்சத்து 44 ஆயிரத்து 147 ஆக உயர்ந்து உள்ளது. நேற்று முன்தினம் வரை கொரோனாவுக்கு 11 ஆயிரத்து 347 பேர் இறந்தனர். நேற்று மேலும் 22 பேர் இறந்தனர். இதனால் உயிரிழப்பு 11 ஆயிரத்து 369 ஆக உயர்ந்து உள்ளது.

    நேற்று 2,235 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதுவரை 7 லட்சத்து 99 ஆயிரத்து 439 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 33 ஆயிரத்து 320 பேர் சிகிச்சையில் உள்ளனர். 901 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர். நேற்று 1 லட்சத்து 10 ஆயிரத்து 137 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதுவரை 85 லட்சத்து 14 ஆயிரத்து 653 பேரின் மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன.

    புதிதாக பாகல்கோட்டையில் 24 பேர், பல்லாரியில் 55 பேர், பெலகாவியில் 19 பேர், பெங்களூரு புறநகரில் 70 பேர், பெங்களூரு நகரில் 1,046 பேர், பீதரில் 2 பேர், சாம்ராஜ்நகரில் 13 பேர், சிக்பள்ளாப்பூரில் 56 பேர், சிக்கமகளூருவில் 63 பேர், சித்ரதுர்காவில் 98 பேர், தட்சிண கன்னடாவில் 72 பேர், தாவணகெரேயில் 44 பேர், தார்வாரில் 12 பேர், கதக்கில் 7 பேர், ஹாசனில் 83 பேர், ஹாவேரியில் 26 பேர், கலபுரகியில் 24 பேர், குடகில் 18 பேர், கோலாரில் 19 பேர், கொப்பலில் 22 பேர், மண்டியாவில் 68 பேர், மைசூருவில் 79 பேர், ராய்ச்சூரில் 8 பேர், ராமநகரில் 28 பேர், சிவமொக்காவில் 24 பேர், துமகூருவில் 165 பேர், உடுப்பியில் 18 பேர், உத்தர கன்னடாவில் 29 பேர், விஜயாப்புராவில் 58 பேர், யாதகிரியில் 8 பேர் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டனர்.

    பெங்களூருவில் 7 பேர், துமகூருவில் 3 பேர், கோலார், மைசூருவில் தலா 2 பேர், பல்லாரி, பெலகாவி, பெங்களூரு புறநகர், பீதர், தட்சிண கன்னடா, தார்வார், உடுப்பி, உத்தர கன்னடாவில் தலா ஒருவர் என மொத்தம் 22 பேர் இறந்தனர். 18 மாவட்டங்களில் நேற்று ஒருவர் கூட கொரோனாவுக்கு பலியாகவில்லை.
    Next Story
    ×