என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கொரோனாவை காரணம் காட்டி பட்டாசு வெடிக்க தடை விதித்தது கர்நாடகம்
Byமாலை மலர்6 Nov 2020 9:49 AM GMT (Updated: 6 Nov 2020 9:49 AM GMT)
பட்டாசுகளுக்கு தடை விதித்த மாநிலங்கள் வரிசையில் பாஜக ஆளும் கர்நாடகமும் இணைந்துள்ளது.
பெங்களூரு:
கொரோனா வைரஸ் பரவல் மற்றும் காற்று மாசு அதிகரிப்பு காரணமாக பட்டாசுகளுக்கு தடை விதித்து டெல்லி, ராஜஸ்தான், ஒடிசா ஆகிய மாநிலங்கள் உத்தரவிட்டுள்ளன. அந்த வரிசையில் பாஜக ஆளும் கர்நாடகமும் இணைந்துள்ளது. கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு பட்டாசுகள் மேலும் பாதிப்பை ஏற்படுத்தும் என மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சுதாகர் நேற்று கூறியிருந்தார். தீபாவளிக்கு பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
தீபாவளிக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், கொரோனா தொற்று காரணமாக பட்டாசு வெடிக்க தடை விதிக்க முடிவு செய்திருப்பதாக முதல்வர் எடியூரப்பா தெரிவித்தார். இந்த தீபாவளியில் பட்டாசுகளை தடை செய்வதற்கான முடிவை எடுத்ததாகவும் கூறிய எடியூரப்பா, இது தொடர்பாக விவாதிக்கப்பட்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
அரியானாவில் குறிப்பிட்ட பட்டாசுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இறக்குமதி செய்யப்பட்ட பட்டாசுகளை இருப்பு வைத்திருப்பது, விற்பனை செய்வது சட்டவிரோதம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X