search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    12 வயதிற்குட்பட்ட குழந்தைகளிடையே அதிக அறிகுறியற்ற கொரோனா பாதிப்புகள்- எய்ம்ஸ்

    73.5 சதவீதம் 12 வயதிற்குட்பட்ட குழந்தைகளிடையே அதிக அறிகுறியற்ற கொரோனா பாதிப்புகள் பதிவாகி உள்ளன என எய்ம்ஸ் மருத்துவமனை புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.
    புதுடெல்லி:

    அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தின(எய்ம்ஸ்) புள்ளிவிவரங்களின்படி, வயதுக்குறைந்தவர்களில் கொரோனா வைரஸ் நோய்க்கு நேர்மறை சோதனை செய்தவர்களில் கிட்டத்தட்ட 40 சதவீதம் பேர்  அறிகுறியற்றவர்கள் என கண்டறியப்பட்டுள்ளது.

    கொரோனா  நிர்வாகத்தில் சமீபத்திய போக்குகள் மற்றும் சிக்கல்களைப் பற்றி விவாதிக்க நாடு முழுவதும் உள்ள மருத்துவர்களுக்கான  தேசிய கிராண்ட் ரவுண்  உரையாடலில்.  டாக்டர்களால் உணர்திறன் மற்றும் பல்வேறு கண்டறிதல் சோதனைகளின் பயன்பாடு குறித்து விவாதித்தனர். அப்போது இந்த புள்ளி விவரங்கள் வழங்கப்பட்டது.

    73.5 சதவீதம் 12 வயதிற்குட்பட்ட குழந்தைகளிடையே அதிக அறிகுறியற்ற பாதிப்புகள் பதிவாகியுள்ளன. இந்த விகிதம் வயதுக்கு ஏற்ப குறைந்தது, 80 வயதிற்கு மேற்பட்டவர்களில் 38.4 சதவீத பாதிப்புகள் மட்டுமே அறிகுறியற்றவை.

    எய்ம்ஸ் நுண்ணுயிரியல் துறை பேராசிரியர் டாக்டர் ஊர்வசி சிங் கூறியதாவது:-

    "இது எங்கள் மையத்தில் உள்ள புள்ளி விவரங்கள்  ஆர்டி பி.சி.ஆர் சோதனையில் பல நோயாளிகளிடம் அறிகுறிகள் இல்லாததால், எந்த நாளில் நாங்கள் அவற்றை மாதிரி செய்கிறோம் என்பது எங்களுக்குத் தெரியவில்லை என கூறினார்.

    எய்ம்ஸ் இயக்குனர் டாக்டர் ரன்தீப் குலேரியா கூறியதாவது:-

    "அவசர காலங்களில்,கொரோனா பாதிக்கபட்டவர் என்று நினைத்து, அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும். எவ்வாறாயினும், அவசர காலங்களில், சிபிஎன்ஏடி மற்றும் ட்ரூநாட் ஆகியவை நல்ல சோதனைகள், அவை துல்லியமான முடிவுகளை விரைவாகக் கொடுக்கக்கூடும், மேலும் கொரோனா மையத்தில் ஒரு அறுவை சிகிச்சை செய்யப்பட வேண்டுமா என்பதை தீர்மானிக்க இது உதவும் என்று கூறினார்.
    Next Story
    ×