என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இறையாண்மையை பாதுகாப்பதில் இந்தியா உறுதியாக உள்ளது - ராஜ்நாத்சிங் திட்டவட்டம்
Byமாலை மலர்5 Nov 2020 8:18 PM GMT (Updated: 5 Nov 2020 8:18 PM GMT)
ஆக்கிரமிப்பை எதிர்நோக்கி வருவதால், நாட்டின் இறையாண்மையை பாதுகாக்க இந்தியா உறுதி பூண்டுள்ளது என்று ராஜ்நாத்சிங் கூறினார்.
புதுடெல்லி:
தேசிய பாதுகாப்பு கல்லூரியின் வைரவிழாவையொட்டி காணொலி காட்சி மூலம் கருத்தரங்கம் நடைபெற்றது. அதில், ராணுவ மந்திரி ராஜ்நாத்சிங் பேசினார்.
அவர் பேசியதாவது:-
இந்தியா, அமைதியை விரும்பும் நாடு. கருத்து வேறுபாடுகள், சர்ச்சைகளாக உருவெடுக்கக்கூடாது என்று கருதுகிறோம்.
கருத்து வேறுபாடுகளுக்கு பேச்சுவார்த்தை மூலம் அமைதி தீர்வு காணலாம் என்பதில் நம்பிக்கை கொண்ட நாடு. அதனால்தான், எல்லை பிரச்சினை தொடர்பாக செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களை இந்தியா மதித்து நடந்துள்ளது.
இருப்பினும், ஆக்கிரமிப்பை எதிர்நோக்கி வருவதால், நாட்டின் இறையாண்மையையும், பிராந்திய ஒருமைப்பாட்டையும் பாதுகாக்க இந்தியா உறுதி பூண்டுள்ளது. அதற்காக எத்தகைய தியாகத்தையும் செய்வோம். போரை தடுக்கக்கூடிய திறமையால்தான் அமைதியை நிலைநாட்ட முடியும். அதற்காக உள்நாட்டிலேயே பாதுகாப்பு தளவாட உற்பத்தியை அதிகரிக்க பாடுபட்டு வருகிறோம்.
கடந்த 6 ஆண்டுகளில், ஒருமித்த கருத்துடைய நாடுகளுடன் நட்புறவை உருவாக்குவதில் இந்தியா கவனம் செலுத்தி வருகிறது. அதனால், அமெரிக்காவுடனான பாதுகாப்பு முக்கியத்துவம்வாய்ந்த உறவு, முன்பைவிட வலிமையாக இருக்கிறது.
அதுபோல், ஜப்பானுடனான நட்புறவு அபரிமிதமாக வளர்ந்துள்ளது. ஆஸ்திரேலியாவுடனும் நட்புறவு அதிகரித்துள்ளது. இந்தியாவும், ரஷியாவும் கடந்த காலங்களில் பல சவால்களை முறியடித்துள்ளன. ரஷியாவுடன் நமது உறவு தொடர்கிறது.
பாகிஸ்தானை பொறுத்தவரை, பயங்கரவாதத்தை பயன்படுத்துவதை அரசின் கொள்கையாகவே பிடிவாதமாக கடைப்பிடித்து வருகிறது.
அதன் பிற்போக்கு கொள்கைகளை அம்பலப்படுத்துவதில் நாம் வெற்றி பெற்றதுடன், முன்புபோல் மற்ற நாடுகளுடன் பாகிஸ்தான் நட்புறவை கொள்வதை கடினமாக்கி இருக்கிறோம்.
இவ்வாறு ராஜ்நாத்சிங் பேசினார்.
தேசிய பாதுகாப்பு கல்லூரியின் வைரவிழாவையொட்டி காணொலி காட்சி மூலம் கருத்தரங்கம் நடைபெற்றது. அதில், ராணுவ மந்திரி ராஜ்நாத்சிங் பேசினார்.
அவர் பேசியதாவது:-
இந்தியா, அமைதியை விரும்பும் நாடு. கருத்து வேறுபாடுகள், சர்ச்சைகளாக உருவெடுக்கக்கூடாது என்று கருதுகிறோம்.
கருத்து வேறுபாடுகளுக்கு பேச்சுவார்த்தை மூலம் அமைதி தீர்வு காணலாம் என்பதில் நம்பிக்கை கொண்ட நாடு. அதனால்தான், எல்லை பிரச்சினை தொடர்பாக செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களை இந்தியா மதித்து நடந்துள்ளது.
இருப்பினும், ஆக்கிரமிப்பை எதிர்நோக்கி வருவதால், நாட்டின் இறையாண்மையையும், பிராந்திய ஒருமைப்பாட்டையும் பாதுகாக்க இந்தியா உறுதி பூண்டுள்ளது. அதற்காக எத்தகைய தியாகத்தையும் செய்வோம். போரை தடுக்கக்கூடிய திறமையால்தான் அமைதியை நிலைநாட்ட முடியும். அதற்காக உள்நாட்டிலேயே பாதுகாப்பு தளவாட உற்பத்தியை அதிகரிக்க பாடுபட்டு வருகிறோம்.
கடந்த 6 ஆண்டுகளில், ஒருமித்த கருத்துடைய நாடுகளுடன் நட்புறவை உருவாக்குவதில் இந்தியா கவனம் செலுத்தி வருகிறது. அதனால், அமெரிக்காவுடனான பாதுகாப்பு முக்கியத்துவம்வாய்ந்த உறவு, முன்பைவிட வலிமையாக இருக்கிறது.
அதுபோல், ஜப்பானுடனான நட்புறவு அபரிமிதமாக வளர்ந்துள்ளது. ஆஸ்திரேலியாவுடனும் நட்புறவு அதிகரித்துள்ளது. இந்தியாவும், ரஷியாவும் கடந்த காலங்களில் பல சவால்களை முறியடித்துள்ளன. ரஷியாவுடன் நமது உறவு தொடர்கிறது.
பாகிஸ்தானை பொறுத்தவரை, பயங்கரவாதத்தை பயன்படுத்துவதை அரசின் கொள்கையாகவே பிடிவாதமாக கடைப்பிடித்து வருகிறது.
அதன் பிற்போக்கு கொள்கைகளை அம்பலப்படுத்துவதில் நாம் வெற்றி பெற்றதுடன், முன்புபோல் மற்ற நாடுகளுடன் பாகிஸ்தான் நட்புறவை கொள்வதை கடினமாக்கி இருக்கிறோம்.
இவ்வாறு ராஜ்நாத்சிங் பேசினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X