search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா பரிசோதனை
    X
    கொரோனா பரிசோதனை

    24 மணி நேரத்தில் 50,209 பேருக்கு தொற்று -இந்தியாவில் கொரோனா பாதிப்பு 83.64 லட்சமாக உயர்வு

    இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 83.64 லட்சமாக உயர்ந்துள்ள நிலையில், 77.11 லட்சம் பேர் பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர்.
    புதுடெல்லி:

    இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று படிப்படியாக குறைந்து வருகிறது. தினசரி பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வரும் அதேசமயம், குணமடையும் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவது நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது.
     
    இந்நிலையில், இன்று காலை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட தகவலின்படி இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 83,64,086 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 50,209 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 704 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,24,315 ஆக உயர்ந்துள்ளது.

    கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 77,11,809 ஆக உயர்ந்துள்ளது. நேற்று மட்டும் 55,331 பேர் குணமடைந்துள்ளனர். புதிய நோய்த்தொற்று எண்ணிக்கையை விட அதிக நபர்கள் குணமடைந்துள்ளனர்.

    நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 5,27,962 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். உயிரிழப்பு 1.49 சதவீதமாக உள்ளது. குணமடையும் விகிதம் 92.20 சதவீதமாக உயர்ந்துள்ளது.
    Next Story
    ×