என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவை சேர்ந்தது - ராஜ்நாத் சிங்
Byமாலை மலர்4 Nov 2020 1:25 PM GMT (Updated: 4 Nov 2020 1:25 PM GMT)
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவை சேர்ந்தது என்பதை பாகிஸ்தான் புரிந்துகொள்ள வேண்டும் என ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
முசாபர்பூர்:
பீகார் சட்டசபை தேர்தல் 3 கட்டங்களாக நடக்கிறது. முதல் கட்ட தேர்தல், கடந்த மாதம் 28-ந் தேதி நடந்தது. 55 சதவீத ஓட்டுகள் பதிவானது. இந்த நிலையில், நேற்று 2-ம் கட்ட தேர்தல், 94 தொகுதிகளில் நடந்தது. 2 ஆம் கட்ட சட்டமன்ற தேர்தலில் 53.51 சதவித வாக்குகள் பதிவாகியுள்ளன.
வரும் 7 ஆம் தேதி 78 தொகுதிகளுக்கு 3-ஆம் கட்டமாக தேர்தல் நடக்க உள்ளது. மூன்றாம் கட்ட தேர்தலுக்காக அனல் பறக்கும் பிரச்சாரத்தில் அரசியல் தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
அந்தவகையில் பீகாரின் முசாபர்பூரில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் கூறியதாவது: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவை சேர்ந்தது என்பதை பாகிஸ்தான் புரிந்துகொள்ள வேண்டும். அதை இந்தியாவின் ஒரு பகுதியாக தான் கருதுகிறோம். எதிர்காலத்திலும் அது இந்தியாவுடன் தான் இருக்கும். இது நாடாளுமன்றத்தின் தீர்மானம்” என தெரிவித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X