என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
விஜய் மல்லையாவை நாடு கடத்துவது எந்த நிலையில் உள்ளது? - மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு கேள்வி
Byமாலை மலர்3 Nov 2020 12:12 AM GMT (Updated: 3 Nov 2020 12:12 AM GMT)
விஜய் மல்லையாவை நாடு கடத்துவதில் இங்கிலாந்தில் உள்ள நிலவரம் குறித்து 6 வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்யுமாறு மத்திய அரசு வக்கீலுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
புதுடெல்லி:
ரூ.9 ஆயிரம் கோடி வங்கி கடனை திருப்பிச் செலுத்தாமல் தப்பி ஓடிய தொழிலதிபர் விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்த லண்டன் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இருப்பினும், சில நடைமுறைகள் காரணமாக, அவர் இன்னும் நாடு கடத்தப்படவில்லை.
இதுபற்றிய வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. சில ரகசிய சட்ட நடவடிக்கைகளுக்கு தீர்வு காணப்படும் வரை விஜய் மல்லையாவை நாடு கடத்துவது சாத்தியம் இல்லை என்று சுப்ரீம் கோர்ட்டில் கடந்த மாதம் 5-ந் தேதி மத்திய அரசு தெரிவித்தது.
இந்த நிலையில், நீதிபதிகள் யு.யு.லலித், அசோக் பூஷண் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, விஜய் மல்லையாவை நாடு கடத்துவதில் இங்கிலாந்தில் உள்ள நிலவரம் குறித்து 6 வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்யுமாறு மத்திய அரசு வக்கீலுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். அடுத்தகட்ட விசாரணை ஜனவரி முதல் வாரத்துக்கு ஒத்திவைக்கப்பட்டது.
ரூ.9 ஆயிரம் கோடி வங்கி கடனை திருப்பிச் செலுத்தாமல் தப்பி ஓடிய தொழிலதிபர் விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்த லண்டன் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இருப்பினும், சில நடைமுறைகள் காரணமாக, அவர் இன்னும் நாடு கடத்தப்படவில்லை.
இதுபற்றிய வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. சில ரகசிய சட்ட நடவடிக்கைகளுக்கு தீர்வு காணப்படும் வரை விஜய் மல்லையாவை நாடு கடத்துவது சாத்தியம் இல்லை என்று சுப்ரீம் கோர்ட்டில் கடந்த மாதம் 5-ந் தேதி மத்திய அரசு தெரிவித்தது.
இந்த நிலையில், நீதிபதிகள் யு.யு.லலித், அசோக் பூஷண் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, விஜய் மல்லையாவை நாடு கடத்துவதில் இங்கிலாந்தில் உள்ள நிலவரம் குறித்து 6 வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்யுமாறு மத்திய அரசு வக்கீலுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். அடுத்தகட்ட விசாரணை ஜனவரி முதல் வாரத்துக்கு ஒத்திவைக்கப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X