என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பா.ஜ.க .கூட்டணியில் இருந்து நிதிஷ்குமார் விலகுவார் - சிராக் பஸ்வான் பேட்டி
Byமாலை மலர்2 Nov 2020 1:40 AM GMT (Updated: 2 Nov 2020 1:40 AM GMT)
பீகார் சட்டசபை தேர்தலுக்கு பின்னர் நிதிஷ்குமார், பா.ஜ.க. கூட்டணியில் இருந்து விலகுவார் என சிராக் பஸ்வான் கூறினார்.
பாட்னா:
பீகார் சட்டசபை தேர்தலில் ஆளும் ஐக்கிய ஜனதாதளம் தலைமையிலான பா.ஜ.க. கூட்டணிக்கும், தேஜஸ்வி யாதவ் தலைமையிலான காங்கிரஸ் கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
இதில், மறைந்த மத்திய மந்திரி ராம்விலாஸ் பஸ்வானின் மகன் சிராக் பஸ்வான் தனது லோக் ஜனசக்தி கட்சி சார்பில் 140-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தி உள்ளார்.
இந்த நிலையில், சிராக் பஸ்வான் செய்தி சானல் ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
நேரத்துக்கு நேரம் மாறுபவர் என்ற பெயர் நிதிஷ்குமாருக்கு உண்டு.
ராஷ்டிரீய ஜனதாதளம் கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவுடன் நீண்ட அரசியல் போருக்கு பின்னர் நிதிஷ்குமார் பீகாரில் ஆட்சி அதிகாரத்துக்கு வந்தார். அவர் பா.ஜ.க. உடனான உறவை முறித்துக்கொண்டார். பின்னர் மீண்டும் அந்த கூட்டணியில் அவர் சேர்ந்து கொண்டார்.
நிதிஷ்குமார் தேசிய அளவில் பிரதமருக்கு எதிராக தன்னை ஒரு போட்டியாளராக கருதுகிறார்.
5 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த சட்டசபை தேர்தலில் லாலு பிரசாத் யாதவை பக்கத்தில் வைத்துக்கொண்டு, பிரதமர் மோடிக்கு எதிராக விஷத்தை கக்கினார். ஆனால் 2 ஆண்டுகளில் லாலு பிரசாத் யாதவை கழற்றி விட்டு, மீண்டும் பா.ஜ.க. கூட்டணிக்கு தாவினார்.
நான் சொல்வதை குறித்து வைத்துக்கொள்ளுங்கள். தேர்தல் பிரசாரத்தில் லாலுவை நிதிஷ்குமார் கடுமையாக தாக்கி வந்துள்ளார். ஆனால் அவர் மன நிலையைப் பொறுத்தமட்டில், சட்டசபை தேர்தல் முடிவுக்கு பின்னர் அவர் மீண்டும் பா.ஜ.க. அணியில் இருந்து மாறலாம். அவர் ராஷ்டிரீய ஜனதாதளம் தலைமையிலான மெகா கூட்டணியுடன் சேர்ந்து ஆட்சி அமைக்க முயற்சிக்கலாம். 2024 நாடாளுமன்ற தேர்தலில் மோடிக்கு எதிராக அவர் தன்னை முன்னிலைப்படுத்தலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் நிதிஷ் குமார் அரசு மீது ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்தினார். வீடுகளுக்கு குழாய் நீர் வழங்குதல், கான்கிரீட் கொண்டு பள்ளங்களை நிரப்புதல் உள்ளிட்ட திட்டங்களில் ஊழல் நடத்துள்ளதாகவும், இது குறித்து விசாரணை நடத்தி, அதில் முதல்-மந்திரி உடந்தையாக இருந்ததாக தெரிய வந்தால் நாங்கள் ஆச்சரியப்பட மாட்டோம் என்றும் குறிப்பிட்டார்.
பீகார் சட்டசபை தேர்தலில் ஆளும் ஐக்கிய ஜனதாதளம் தலைமையிலான பா.ஜ.க. கூட்டணிக்கும், தேஜஸ்வி யாதவ் தலைமையிலான காங்கிரஸ் கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
இதில், மறைந்த மத்திய மந்திரி ராம்விலாஸ் பஸ்வானின் மகன் சிராக் பஸ்வான் தனது லோக் ஜனசக்தி கட்சி சார்பில் 140-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தி உள்ளார்.
இந்த நிலையில், சிராக் பஸ்வான் செய்தி சானல் ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
நேரத்துக்கு நேரம் மாறுபவர் என்ற பெயர் நிதிஷ்குமாருக்கு உண்டு.
ராஷ்டிரீய ஜனதாதளம் கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவுடன் நீண்ட அரசியல் போருக்கு பின்னர் நிதிஷ்குமார் பீகாரில் ஆட்சி அதிகாரத்துக்கு வந்தார். அவர் பா.ஜ.க. உடனான உறவை முறித்துக்கொண்டார். பின்னர் மீண்டும் அந்த கூட்டணியில் அவர் சேர்ந்து கொண்டார்.
நிதிஷ்குமார் தேசிய அளவில் பிரதமருக்கு எதிராக தன்னை ஒரு போட்டியாளராக கருதுகிறார்.
5 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த சட்டசபை தேர்தலில் லாலு பிரசாத் யாதவை பக்கத்தில் வைத்துக்கொண்டு, பிரதமர் மோடிக்கு எதிராக விஷத்தை கக்கினார். ஆனால் 2 ஆண்டுகளில் லாலு பிரசாத் யாதவை கழற்றி விட்டு, மீண்டும் பா.ஜ.க. கூட்டணிக்கு தாவினார்.
நான் சொல்வதை குறித்து வைத்துக்கொள்ளுங்கள். தேர்தல் பிரசாரத்தில் லாலுவை நிதிஷ்குமார் கடுமையாக தாக்கி வந்துள்ளார். ஆனால் அவர் மன நிலையைப் பொறுத்தமட்டில், சட்டசபை தேர்தல் முடிவுக்கு பின்னர் அவர் மீண்டும் பா.ஜ.க. அணியில் இருந்து மாறலாம். அவர் ராஷ்டிரீய ஜனதாதளம் தலைமையிலான மெகா கூட்டணியுடன் சேர்ந்து ஆட்சி அமைக்க முயற்சிக்கலாம். 2024 நாடாளுமன்ற தேர்தலில் மோடிக்கு எதிராக அவர் தன்னை முன்னிலைப்படுத்தலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் நிதிஷ் குமார் அரசு மீது ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்தினார். வீடுகளுக்கு குழாய் நீர் வழங்குதல், கான்கிரீட் கொண்டு பள்ளங்களை நிரப்புதல் உள்ளிட்ட திட்டங்களில் ஊழல் நடத்துள்ளதாகவும், இது குறித்து விசாரணை நடத்தி, அதில் முதல்-மந்திரி உடந்தையாக இருந்ததாக தெரிய வந்தால் நாங்கள் ஆச்சரியப்பட மாட்டோம் என்றும் குறிப்பிட்டார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X