என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மகாராஷ்டிராவில் சட்டவிரோதமாக குடியேறிய வங்காளதேசத்தினர் 15 பேர் கைது
Byமாலை மலர்1 Nov 2020 11:24 AM GMT (Updated: 1 Nov 2020 11:24 AM GMT)
மகாராஷ்டிரா மாநிலத்தில் உரிய ஆவணங்கள் இன்றி சட்டவிரோதமாக குடியேறிய வங்காளதேசத்தினர் 15 பேரை போலீசார் கைது செய்தனர்.
மும்பை:
அசாம் மாநிலத்தில் சட்டவிரோதமாக குடியேறிய வங்கதேசத்தவர்களை கண்டறியும் வகையில் தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆர்சி) தயாரிக்கப்பட்டது.
இதனால் வங்காளதேசத்தில் இருந்து இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்தவர்கள் பலர் நாட்டின் பல்வேறு மாநிலங்களுக்கு சென்று அங்குள்ள மக்களோடு மக்களாக மறைந்து வாழ்ந்து வருகின்றனர். அவர்களை கண்டுபிடிக்கும் வகையில் குடியுரிமை திருத்தச்சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலம் மும்பையின் நயா நகர் காவல் எல்லைக்கு உள்பட்ட மீரா சாலை ஸ்கைவாக் பகுதியில் வங்காளதேச நாட்டை சேர்ந்தவர்கள் சட்ட விரோதமாக குடியிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதியில் போலீசார் இன்று அதிரடி சோதனை நடத்தினர்.
அந்த சோதனையில் விசா மற்றும் உரிய ஆவணங்கள் இன்றி அப்பகுதியில் குடியிருந்த 15 வங்காளதேச நாட்டினரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். கைது செய்யப்பட்ட வங்காளதேச நாட்டினரிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X