search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பரிசோதனைக்கான சாம்பிள்கள்
    X
    பரிசோதனைக்கான சாம்பிள்கள்

    கொரோனா தொற்றை கண்டறிய இதுவரை 10.98 கோடி சாம்பிள்கள் சோதனை- ஐசிஎம்ஆர்

    இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றை கண்டறிவதற்காக நேற்று மட்டும் 10.91 லட்சம் சாம்பிள்கள் பரிசோதனை செய்யப்பட்டிருப்பதாக ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.
    புதுடெல்லி:

    இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 82 லட்சத்தை நெருங்கி உள்ளது. கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 91.54  சதவீதமாக உயர்ந்துள்ளது. புதிய நோய்த்தொற்றும் படிப்படியாக குறைந்து வருகிறது. 

    அதேசமயம் கொரோனா தொற்றை விரைவாக கண்டறிந்து, சிகிச்சை அளிப்பதற்கு ஏதுவாக பரிசோதனைகள் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகின்றன. 

    இந்நிலையில் இந்தியாவில் பரிசோதனை செய்யப்பட்ட சாம்பிள்களின் மொத்த எண்ணிக்கை 10.98 கோடியாக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றை கண்டறிவதற்காக நேற்று வரை 10,98,87,303 சாம்பிள்கள் சோதனை செய்யப்பட்டிருப்பதாகவும், நேற்று மட்டும் 10,91,239 சாம்பிள்கள் சோதனை செய்யப்பட்டிருப்பதாகவும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) தெரிவித்துள்ளது.
    Next Story
    ×