search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா சோதனை
    X
    கொரோனா சோதனை

    கர்நாடகத்தில் புதிதாக 3,589 பேருக்கு கொரோனா: சுகாதாரத்துறை தகவல்

    கர்நாடகத்தில் புதிதாக 3,589 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 8 லட்சத்து 20 ஆயிரத்து 398 ஆக உயர்ந்துள்ளது.
    பெங்களூரு

    கர்நாடக சுகாதாரத்துறை, மாநிலத்தில் நேற்றைய கொரோனா பாதிப்பு குறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருந்ததாவது:-

    கர்நாடகத்தில் நேற்று முன்தினம் வரை 8 லட்சத்து 16 ஆயிரத்து 809 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். நேற்று புதிதாக 3,589 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 8 லட்சத்து 20 ஆயிரத்து 398 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கு மேலும் 49 பேர் உயிரிழந்தனர். இதனால் வைரஸ் தொற்றால் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 11 ஆயிரத்து 140 ஆக உயர்ந்து உள்ளது.

    புதிதாக பாகல்கோட்டையில் 20 பேரும், பல்லாரியில் 82 பேரும், பெலகாவியில் 57 பேரும், பெங்களூரு புறநகரில் 72 பேரும், பெங்களூரு நகரில் 1,811 பேரும், பீதரில் 6 பேரும், சாம்ராஜ்நகரில் 31 பேரும், சிக்பள்ளாப்பூரில் 143 பேரும், சிக்கமகளூருவில் 68 பேரும், சித்ரதுர்காவில் 122 பேரும், தட்சிண கன்னடாவில் 137 பேரும், தாவணகெரேயில் 56 பேரும், தார்வாரில் 43 பேரும், கதக்கில் 17 பேரும், ஹாசனில் 116 பேரும், ஹாவேரியில் 7 பேரும், கலபுரகியில் 50 பேரும், குடகில் 48 பேரும், கோலாரில் 62 பேரும், கொப்பலில் 27 பேரும், மண்டியாவில் 125 பேரும், மைசூருவில் 118 பேரும், ராய்ச்சூரில் 9 பேரும், ராமநகரில் 9 பேரும், சிவமொக்காவில் 34 பேரும், துமகூருவில் 132 பேரும், உடுப்பியில் 44 பேரும், உத்தர கன்னடாவில் 51 பேரும், விஜயாப்புராவில் 75 பேரும், யாதகிரியில் 17 பேரும் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டு உள்ளனர்.

    பெங்களூருவில் 27 பேர், மைசூருவில் பேர், பல்லாரி 4 பேர், தார்வார், துமகூரு, தட்சிண கன்னடாவில் 3 பேர் உள்பட 49 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 8,521 பேர் டிஸ்சார்ஜ் ஆனார்கள். இதனால் குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 7 லட்சத்து 49 ஆயிரத்து 740 ஆக உயர்ந்துள்ளது. 59 ஆயிரத்து 499 பேர் சிகிச்சையில் உள்ளனர். 935 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர். நேற்று 1 லட்சத்து 3 ஆயிரத்து 281 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. ஒட்டுமொத்தமாக இதுவரை 78 லட்சத்து லட்சத்து 4 ஆயிரத்து 312 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

    இவ்வாறு சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.

    Next Story
    ×