என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பாலக்காடு அருகே தந்தையை கொன்ற மகள் கைது
Byமாலை மலர்30 Oct 2020 9:27 AM GMT (Updated: 30 Oct 2020 9:27 AM GMT)
பாலக்காடு அருகே தந்தையை கத்தியால் குத்திக்கொன்ற மகளை போலீசார் கைது செய்தனர்.
பாலக்காடு:
பாலக்காடு அருகே உள்ள ஆர்.வி.பி.புதூரை சேர்ந்தவர் காளியப்பன் (வயது 57). இவருக்கு மனைவி மற்றும் மகள் உள்ளனர். குடிப்பழக்கத்துக்கு அடிமையான காளியப்பன், தினமும் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து மனைவி மற்றும் மகளிடம் தகராறு செய்து வந்துள்ளார். அதன்படி அவர் சம்பவத்தன்று குடித்துவிட்டு வீட்டிற்கு வந்தார். பின்னர் அவர் தனது மனைவி மற்றும் மகளிடம் தகராறு செய்தார்.
இதனால் அவர்கள் இருவரும் சேர்ந்து காளியப்பனை வீட்டைவிட்டு வெளியே தள்ளிவிட்டு கதவை சாத்திக்கொண்டனர். வெளியே நின்ற காளியப்பன் பலமுறை கதவை தட்டியும் அவர்கள் திறக்கவில்லை. இதனால் அவர் கதவை தட்டிக்கொண்டே இருந்தார்.
இதையடுத்து மனைவி மற்றும் மகள் இருவரும் கதவை திறந்துவிட்டு வெளியே வந்தனர். அப்போது காளியப்பன் தனது மனைவி மற்றும் மகளை சரமாரியாக தாக்கியதாக தெரிகிறது. இதில் ஆத்திரம் அடைந்த மகள் மாலதி (23) அங்கு கிடந்த கத்தியை எடுத்து தந்தை என்றும் பாராமல் அவருடைய நெஞ்சில் சரமாரியாக குத்தினார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு பாலக்காடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இது குறித்த புகாரின்பேரில் பாலக்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து மாலதியை கைது செய்தனர்.
பாலக்காடு அருகே உள்ள ஆர்.வி.பி.புதூரை சேர்ந்தவர் காளியப்பன் (வயது 57). இவருக்கு மனைவி மற்றும் மகள் உள்ளனர். குடிப்பழக்கத்துக்கு அடிமையான காளியப்பன், தினமும் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து மனைவி மற்றும் மகளிடம் தகராறு செய்து வந்துள்ளார். அதன்படி அவர் சம்பவத்தன்று குடித்துவிட்டு வீட்டிற்கு வந்தார். பின்னர் அவர் தனது மனைவி மற்றும் மகளிடம் தகராறு செய்தார்.
இதனால் அவர்கள் இருவரும் சேர்ந்து காளியப்பனை வீட்டைவிட்டு வெளியே தள்ளிவிட்டு கதவை சாத்திக்கொண்டனர். வெளியே நின்ற காளியப்பன் பலமுறை கதவை தட்டியும் அவர்கள் திறக்கவில்லை. இதனால் அவர் கதவை தட்டிக்கொண்டே இருந்தார்.
இதையடுத்து மனைவி மற்றும் மகள் இருவரும் கதவை திறந்துவிட்டு வெளியே வந்தனர். அப்போது காளியப்பன் தனது மனைவி மற்றும் மகளை சரமாரியாக தாக்கியதாக தெரிகிறது. இதில் ஆத்திரம் அடைந்த மகள் மாலதி (23) அங்கு கிடந்த கத்தியை எடுத்து தந்தை என்றும் பாராமல் அவருடைய நெஞ்சில் சரமாரியாக குத்தினார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு பாலக்காடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இது குறித்த புகாரின்பேரில் பாலக்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து மாலதியை கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X