என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தொலைதூர மருத்துவ சேவை பெறுவதில் தமிழகம் முதலிடம்
Byமாலை மலர்28 Oct 2020 11:49 PM GMT (Updated: 28 Oct 2020 11:49 PM GMT)
தொலைதூர மருத்துவ சேவை பெறுவதில் தமிழகம் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது.
புதுடெல்லி:
மக்களுக்கு ஆன்லைன் மூலம் மருத்துவ சேவை வழங்குவதற்காக மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகம் ‘இசஞ்சீவனி’ என்ற இணையதளத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இதன் வெளிநோயாளிகள் பிரிவு 6 ஆயிரத்துக்கும் அதிகமான டாக்டர்களுடன் 217 ஆன்லைன் பிரிவுகளில் சேவை வழங்குகிறது. இந்த தளத்தில் இதுவரை நாடு முழுவதும் 6 லட்சத்து 4 ஆயிரத்து 164 மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டு இருப்பதாக சுகாதார அமைச்சகம் நேற்று தெரிவித்துள்ளது. இதில் கடந்த 15 நாட்களில் மட்டும் ஒரு லட்சம் ஆலோசனைகள் அளிக்கப்பட்டு இருக்கிறது.
இந்த ஆலோசனை வழங்கலில் தமிழகம் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. தமிழகத்தில் இதுவரை 2 லட்சத்து 3 ஆயிரத்து 286 ஆலோசனைகள் பெறப்பட்டு உள்ளன. இரண்டாவதாக உத்தரபிரதேசத்தில் ஒரு லட்சத்து 68 ஆயிரத்து 553 ஆலோசனைகள் வழங்கப்பட்டு உள்ளன. மாவட்டங்களைப் பொறுத்தவரை விழுப்புரம், மதுரை, திருவண்ணாமலை ஆகிய தமிழக மாவட்டங்கள் நாட்டிலேயே முதல் 3 இடங்களை பிடித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
மக்களுக்கு ஆன்லைன் மூலம் மருத்துவ சேவை வழங்குவதற்காக மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகம் ‘இசஞ்சீவனி’ என்ற இணையதளத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இதன் வெளிநோயாளிகள் பிரிவு 6 ஆயிரத்துக்கும் அதிகமான டாக்டர்களுடன் 217 ஆன்லைன் பிரிவுகளில் சேவை வழங்குகிறது. இந்த தளத்தில் இதுவரை நாடு முழுவதும் 6 லட்சத்து 4 ஆயிரத்து 164 மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டு இருப்பதாக சுகாதார அமைச்சகம் நேற்று தெரிவித்துள்ளது. இதில் கடந்த 15 நாட்களில் மட்டும் ஒரு லட்சம் ஆலோசனைகள் அளிக்கப்பட்டு இருக்கிறது.
இந்த ஆலோசனை வழங்கலில் தமிழகம் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. தமிழகத்தில் இதுவரை 2 லட்சத்து 3 ஆயிரத்து 286 ஆலோசனைகள் பெறப்பட்டு உள்ளன. இரண்டாவதாக உத்தரபிரதேசத்தில் ஒரு லட்சத்து 68 ஆயிரத்து 553 ஆலோசனைகள் வழங்கப்பட்டு உள்ளன. மாவட்டங்களைப் பொறுத்தவரை விழுப்புரம், மதுரை, திருவண்ணாமலை ஆகிய தமிழக மாவட்டங்கள் நாட்டிலேயே முதல் 3 இடங்களை பிடித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X