search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மணீஷ் சிசோடியா
    X
    மணீஷ் சிசோடியா

    மறு உத்தரவு வரும்வரை டெல்லியில் பள்ளிகள் திறப்பு இல்லை - மணீஷ் சிசோடியா

    மறுஉத்தரவு வரும்வரை, அனைத்து பள்ளிகளும் தொடர்ந்து மூடப்பட்டு இருக்கும் என்று டெல்லி துணை முதல்-மந்திரி மணீஷ் சிசோடியா நேற்று அறிவித்தார்.
    புதுடெல்லி:

    டெல்லியில், அக்டோபர் 31-ந் தேதிவரை பள்ளிகள் மூடப்பட்டு இருக்கும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்தநிலையில், மறுஉத்தரவு வரும்வரை, அனைத்து பள்ளிகளும் தொடர்ந்து மூடப்பட்டு இருக்கும் என்று டெல்லி துணை முதல்-மந்திரி மணீஷ் சிசோடியா நேற்று அறிவித்தார்.

    அவர் மேலும் கூறியதாவது:-

    பள்ளிகளை திறப்பது பற்றி பெற்றோரிடம் கருத்து கேட்டோம். ஆனால், குழந்தைகளுக்கு பாதுகாப்பு கிடைக்குமா என்று பெற்றோர் கவலைப்படுகிறார்கள். பள்ளிகள் திறக்கப்பட்ட இடங்களில் எல்லாம் மாணவர்களிடையே கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. எனவே, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×