search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    சர்வதேச விமான சேவை ரத்து நீட்டிப்பு

    கொரோனா பரவலை தொடர்ந்து அக்டோபர் 31-ந் தேதியுடன் முடிவடைய இருந்த சர்வதேச விமான சேவை ரத்து நடவடிக்கை, நவம்பர் 30-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
    புதுடெல்லி:

    கொரோனா பரவலை தொடர்ந்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், கடந்த மார்ச் 23-ந் தேதி முதல் உள்நாட்டு, சர்வதேச விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. கடந்த மே 25-ந் தேதி, உள்நாட்டு விமான சேவை தொடங்கியது.

    ஆனால், வழக்கமான சர்வதேச விமான சேவை இன்னும் தொடங்கப்படவில்லை. ‘வந்தே பாரத்’ திட்டத்தின் கீழ் சிறப்பு விமானங்கள் மட்டும் வெளிநாடுகளுக்கு இயக்கப்பட்டன.

    இந்த நிலையில், அக்டோபர் 31-ந் தேதியுடன் முடிவடைய இருந்த சர்வதேச விமான சேவை ரத்து நடவடிக்கை, நவம்பர் 30-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம் நேற்று இதற்கான அறிவிப்பை வெளியிட்டது.

    இருப்பினும், சர்வதேச சரக்கு போக்குவரத்து பாதிக்கப்படாது என்றும் தெரிவித்தது.
    Next Story
    ×