என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இந்தியாவுக்கு எப்-18 ரக போர் விமானங்களை விற்க அமெரிக்கா முடிவு
Byமாலை மலர்28 Oct 2020 8:04 AM GMT (Updated: 28 Oct 2020 8:04 AM GMT)
இந்திய கடற்படைக்கு எப்-18 ரக போர் விமானங்கள் மற்றும் நவீன ஆயுதங்களை விற்பனை செய்ய அமெரிக்கா முன்வந்துள்ளது.
புதுடெல்லி:
இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான ராணுவ ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில் சமீபத்தில் மந்திரிகள் அளவிலான பேச்சுவார்தை நடைபெற்றது. இதில் முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன.
இந்நிலையில் இந்திய கடற்படையின் பயன்பாட்டிற்காக எப்-18 ரக போர் விமானங்களை விற்பனை செய்வதற்கு அமெரிக்கா முன்வந்துள்ளது. சீ கார்டியன் ரக ஆளில்லா விமானங்கள் உள்பட நவீன ஆயுதங்களையும் விற்க முன்வந்துள்ளது.
சமீபத்தில் 2+2 பேச்சுவார்த்தையின்போது இரு நாடுகளின் பாதுகாப்புத் துறை பிரதிநிதிகள் முன்மொழிந்த திட்டமிட்டபடி, அமெரிக்க அரசு தங்கள் கடற்படை போர் விமானமான எப் -18ஐ இந்திய கடற்படைக்கு வழங்க முன்வந்துள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தற்போதைய ஐ.என்.எஸ் விக்ரமாதித்யா மற்றும் தற்போது கட்டப்பட்டு வரும் விமானந்தாங்கி கப்பலில் இருந்து தாக்குதல்களுக்கு பயன்படுத்துவதற்காக 57 போர் விமானங்களை கையகப்படுத்த இந்திய கடற்படை சில ஆண்டுகளுக்கு முன்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X