என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஒரு வாரமாக ஆயிரத்திற்கும் குறைவான பலி எண்ணிக்கை - கொரோனா மீட்பில் நம்பிக்கை
Byமாலை மலர்25 Oct 2020 8:07 AM GMT (Updated: 25 Oct 2020 8:07 AM GMT)
இந்தியாவில் கொரோனா பாதிப்பினால் ஏற்படும் தினசரி உயிரிழப்பு கடந்த ஒரு வார காலமாக ஆயிரத்திற்கும் குறைவாக உள்ளது.
புதுடெல்லி:
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 78.64 லட்சமாக உயர்ந்துள்ளது. இதில் 90 சதவீத நோயாளிகள் குணமடைந்துள்ளனர். இது கொரோனா தடுப்பு நடவடிக்கையில் புதிய சாதனையாக கருதப்படுகிறது. தினமும் 50 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டாலும், அதைவிட அதிக நபர்கள் குணமடைகின்றனர்.
அதேபோல் உயிரிழப்பும் கணிசமாக குறைந்து வருகிறது. தினமும் ஆயிரத்திற்கும் அதிகமான நபர்கள் உயிரிழந்த நிலையில், கடந்த ஒரு வாரமாக உயிரிழப்பு எண்ணிக்கை 1000-க்கு கீழ் குறைந்துள்ளது. அக்டோபர் 2ம் தேதி முதல் தினசரி 1100க்கும் குறைவான மரணங்கள் பதிவாகி உள்ளன. நேற்று 578 பேர் மரணம் அடைந்துள்ளனர்.
குணமடைந்தவர்களின் எண்ணிக்கைக்கும், சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கைக்கும் உள்ள இடைவெளியானது 64 லட்சத்தை கடந்துள்ளது. இன்றைய நிலவரப்படி மொத்த பாதிப்பு எண்ணிக்கையில் 8.50 சதவீதம் சிகிச்சையில் உள்ளனர். அதாவது, நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 6,68,154 பேர் சிகிச்சை பெற்றுவருவதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X