search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரை
    X
    மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரை

    பண்டிகை காலங்களில் உள்ளூர் பொருட்களை அதிகம் வாங்குங்கள் -மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் பேச்சு

    காதி விற்பனை நிலையங்களில் விற்கப்படும் முக கவசங்களை மக்கள் அதிகம் வாங்கி பயன்படுத்துவது மகிழ்ச்சி அளிப்பதாக பிரதமர் மோடி பேசினார்.
    புதுடெல்லி:

    பிரதமர் நரேந்திர மோடி மன் கி பாத் என்ற நிகழ்ச்சியின் மூலம் மாதம்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 11 மணிக்கு அகில இந்திய வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றுவதுடன், மக்களுடன் கலந்துரையாடுகிறார்.

    அவ்வகையில் இந்த மாதத்திற்கான ‘மன் கி பாத்’ வானொலி நிகழ்ச்சி இன்று  காலை 11 மணிக்கு தொடங்கியது. இதில் பிரதமர் மோடி பேசியதாவது:-

    நாட்டு மக்கள் அனைவருக்கும் விஜயதசமி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். விமரிசையாக கொண்டாடப்படும் பண்டிகைகள் இந்த ஆண்டு மிகவும் எளிமையாக கொண்டாடும் சூழல் ஏற்பட்டுள்ளது. பண்டிகை கொண்டாட்டங்கள் வைரஸ் பரவல் காரணமாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா முன்களப் பணியாளர்களை ஊக்குவிக்கும் வகையில் பண்டிகைகள் கொண்டாடப்பட வேண்டும்.

    பண்டிகை காலங்களில் பொருட்கள் வாங்கும்போது உள்ளூர் பொருட்களை அதிக அளவில் வாங்க வேண்டும். உள்ளூர் பொருட்களுக்கு முன்னுரிமை கொடுங்கள். 

    காதி விற்பனை நிலையங்களில் விற்கப்படும் முக கவசங்களை மக்கள் அதிகம் வாங்கி பயன்படுத்துவது மகிழ்ச்சி அளிக்கிறது. வரிசையாக பண்டிகைகள் வர உள்ளதால் தனிமனித இடைவெளியுடன் பண்டிகைகளை கொண்டாடுங்கள்.

    இவ்வாறு அவர்  பேசினார்.
    Next Story
    ×