search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    தேர்தல் பிரசாரத்தின் போது வேட்பாளர் சுட்டுக்கொலை - பீகாரில் அதிர்ச்சி சம்பவம்

    பீகாரில் தேர்தல் பிரசாரத்தின் போது ஜனதாதள ராஷ்ட்ரவாடி கட்சி வேட்பாளர் ஸ்ரீநாராயன் சிங் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
    பாட்னா:

    பீகாரில் வருகிற 28-ந்தேதி முதல் 3 கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. இதற்காக மாநிலத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரங்களில் ஈடுபட்டு உள்ளன. அங்குள்ள ஷியோகர் மாவட்டத்துக்கு உட்பட்ட ஷியோகர் தொகுதியில் ஜனதாதள ராஷ்ட்ரவாடி கட்சி சார்பில் ஸ்ரீநாராயன் சிங் என்பவர் களத்தில் இருந்தார்.

    அங்கு நவம்பர் 3-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற இருந்த நிலையில், இவர் தீவிரமாக பிரசாரம் செய்து வந்தார். அந்தவகையில் நேற்று அந்த தொகுதிக்கு உட்பட்ட ஹத்சார் கிராமத்தில் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தார்.

    அப்போது மோட்டார் சைக்கிள்களில் வந்த 4 பேர் திடீரென ஸ்ரீநாராயன் சிங் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பி ஓடினர். இதில் ஸ்ரீநாராயன் சிங் மற்றும் 2 பேர் குண்டுபாய்ந்து பலத்த காயமடைந்தனர்.

    3 பேரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட நிலையில், ஸ்ரீநாராயன் சிங் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் பீகாரில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து விசாரணை நடந்து வருகிறது.
    Next Story
    ×