என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தேர்தல் பிரசாரத்தின் போது வேட்பாளர் சுட்டுக்கொலை - பீகாரில் அதிர்ச்சி சம்பவம்
Byமாலை மலர்24 Oct 2020 9:40 PM GMT (Updated: 24 Oct 2020 9:40 PM GMT)
பீகாரில் தேர்தல் பிரசாரத்தின் போது ஜனதாதள ராஷ்ட்ரவாடி கட்சி வேட்பாளர் ஸ்ரீநாராயன் சிங் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பாட்னா:
பீகாரில் வருகிற 28-ந்தேதி முதல் 3 கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. இதற்காக மாநிலத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரங்களில் ஈடுபட்டு உள்ளன. அங்குள்ள ஷியோகர் மாவட்டத்துக்கு உட்பட்ட ஷியோகர் தொகுதியில் ஜனதாதள ராஷ்ட்ரவாடி கட்சி சார்பில் ஸ்ரீநாராயன் சிங் என்பவர் களத்தில் இருந்தார்.
அங்கு நவம்பர் 3-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற இருந்த நிலையில், இவர் தீவிரமாக பிரசாரம் செய்து வந்தார். அந்தவகையில் நேற்று அந்த தொகுதிக்கு உட்பட்ட ஹத்சார் கிராமத்தில் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது மோட்டார் சைக்கிள்களில் வந்த 4 பேர் திடீரென ஸ்ரீநாராயன் சிங் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பி ஓடினர். இதில் ஸ்ரீநாராயன் சிங் மற்றும் 2 பேர் குண்டுபாய்ந்து பலத்த காயமடைந்தனர்.
3 பேரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட நிலையில், ஸ்ரீநாராயன் சிங் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் பீகாரில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து விசாரணை நடந்து வருகிறது.
பீகாரில் வருகிற 28-ந்தேதி முதல் 3 கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. இதற்காக மாநிலத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரங்களில் ஈடுபட்டு உள்ளன. அங்குள்ள ஷியோகர் மாவட்டத்துக்கு உட்பட்ட ஷியோகர் தொகுதியில் ஜனதாதள ராஷ்ட்ரவாடி கட்சி சார்பில் ஸ்ரீநாராயன் சிங் என்பவர் களத்தில் இருந்தார்.
அங்கு நவம்பர் 3-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற இருந்த நிலையில், இவர் தீவிரமாக பிரசாரம் செய்து வந்தார். அந்தவகையில் நேற்று அந்த தொகுதிக்கு உட்பட்ட ஹத்சார் கிராமத்தில் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது மோட்டார் சைக்கிள்களில் வந்த 4 பேர் திடீரென ஸ்ரீநாராயன் சிங் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பி ஓடினர். இதில் ஸ்ரீநாராயன் சிங் மற்றும் 2 பேர் குண்டுபாய்ந்து பலத்த காயமடைந்தனர்.
3 பேரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட நிலையில், ஸ்ரீநாராயன் சிங் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் பீகாரில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து விசாரணை நடந்து வருகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X