search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    யுபிஎஸ்சி அலுவலகம்
    X
    யுபிஎஸ்சி அலுவலகம்

    யுபிஎஸ்சி முதல் நிலை தேர்வு முடிவுகள் வெளியீடு

    அக்டோபர் 4-ம் தேதி நடைபெற்ற சிவில் சர்வீசஸ் முதல் நிலை தேர்வு முடிவுகள் 19 நாட்களிலேயே யு.பி.எஸ்.சி. நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
    புதுடெல்லி:

    ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்ளிட்ட சிவில் சர்வீசஸ் பதவிகளுக்கான காலிப்பணியிடங்களை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.) ஒவ்வொரு ஆண்டும் அறிவித்து அதற்கான தேர்வை நடத்தி வருகிறது. முதல் நிலை, முதன்மை மற்றும் நேர்முகத் தேர்வு என 3 கட்டங்களாக இந்த தேர்வு நடத்தப்படும்.

    அந்த வகையில், 2020-ம் ஆண்டுக்கான அறிவிப்பு ஆண்டின் தொடக்கத்தில் வெளியிடப்பட்டது. மொத்தம் 796 காலிப்பணியிடங்களுக்கான இந்த அறிவிப்பை தொடர்ந்து நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான மாணவ-மாணவிகள் விண்ணப்பித்து இருந்தனர்.

    அதன்படி, கடந்த மே 31-ம் தேதி முதல் நிலைத் தேர்வு நடைபெறுவதாக இருந்தது. கொரோனா நோய்த்தொற்றின் தாக்கம் காரணமாக இந்த தேர்வு ஒத்திவைக்கப்பட்டது.

    இதற்கிடையே, கொரோனா நோய்த்தொற்றால் ஒத்திவைக்கப்பட்ட சிவில் சர்வீசஸ் முதல் நிலைத் தேர்வு பல்வேறு எதிர்ப்புகளுக்கு இடையே அக்டோபர் 4-ம் தேதி நடந்தது. நாடு முழுவதும் 72 நகரங்களில் 2 ஆயிரத்து 569 மையங்களில் சுமார் 6½ லட்சத்துக்கும் மேற்பட்டோர் இந்த தேர்வை எழுதினார்கள்.

    இந்நிலையில், அக்டோபர் 4-ம் தேதி நடந்த சிவில் சர்வீசஸ் முதல்நிலை தேர்வு முடிவுகளை யு.பி.எஸ்.சி. நிர்வாகம் வெளியிட்டுள்ளது. சிவில் சர்வீஸ் மெயின் தேர்வு ஜனவரி 8-ம் தேதி நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    சிவில் சர்வீசஸ் தேர்வுகளில் முதல்முறையாக தேர்வு நடைபெற்று 19 நாட்களிலேயே முடிவுகள் வெளியிடப்பட்டது தேர்வு எழுதிய மாணவ-மாணவியரிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    Next Story
    ×