என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இந்தியாவில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 2 மாதங்களுக்கு பிறகு 7 லட்சத்திற்கும் கீழ் குறைந்தது
Byமாலை மலர்23 Oct 2020 6:44 AM GMT (Updated: 23 Oct 2020 6:44 AM GMT)
இந்தியாவில் தினசரி கண்டறியப்படும் புதிய நோய்த்தொற்று எண்ணிக்கையை விட குணமடைவோர் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
புதுடெல்லி:
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 77.61 லட்சமாக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 54,366 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 69.48 லட்சமாக உயர்ந்துள்ளது. நேற்று மட்டும் 73979 பேர் குணமடைந்துள்ளனர். தினசரி கண்டறியப்படும் புதிய நோய்த்தொற்று எண்ணிக்கையை விட அதிக நபர்கள் குணமடைந்து வருகின்றனர்.
நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 6,95,509 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இதன்மூலம் இரண்டு மாதங்களுக்கு பிறகு (63 நாட்கள்) சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 7 லட்சத்திற்கும் கீழ் குறைந்திருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கொரோனாவால் ஏற்படும் உயிரிழப்பு 1.51 சதவீதமாக உள்ளது. குணமடையும் விகிதம் 89.53 சதவீதமாக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X