என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஜெ.இ.இ தேர்வுகள் கூடுதல் மாநில மொழிகளில் நடத்தப்படும் - மத்திய மந்திரி ரமேஷ் பொக்ரியால் அறிவிப்பு
Byமாலை மலர்22 Oct 2020 11:39 PM GMT (Updated: 22 Oct 2020 11:39 PM GMT)
ஜெ.இ.இ மெயின் தேர்வுகள் கூடுதல் மாநில மொழிகளில் நடத்தப்படும் என்று மத்திய மந்திரி ரமேஷ் பொக்ரியால் கூறியுள்ளார்.
புதுடெல்லி:
நாடு முழுவதிலும் உள்ள இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களில் சேர்ந்து படிப்பதற்கு ஜெ.இ.இ நுழைவுத் தேர்வு அவசியம் ஆகும்.
ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படும் இந்தத் தேர்வுகள் ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே இதுவரை நடத்தப்பட்டு வருகிறது. ஜெ.இ.இ தேர்வுகளை பிராந்திய மொழிகளிலும் நடத்தப்பட வேண்டும் என தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்கள் கோரிக்கை விடுத்தன.
இந்த கோரிக்கை தற்போது ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. ஜெ.இ.இ முதன்மை தேர்வு மற்றும் அட்வான்ஸ் தேர்வு ஆகிய இரு கட்டங்களாக நடத்தப்படும். ஜெ.இ.இ (மெயின்) தேர்வுகள் இனிமேல் பிராந்திய மொழியில் நடத்தப்படும் என்று மத்திய கல்வித்துறை மந்திரி ரமேஷ் பொக்ரியால் அறிவித்துள்ளார்.
மத்திய மந்திரியின் இந்த அறிவிப்பை தமிழகம் உள்பட அனைத்து மாநிலங்களும் வரவேற்றுள்ளன.
ஐ.ஐ.டி., என்.ஐ.டி, உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் சேருவதற்கு ஜெ.இ.இ தேர்வில் தேர்ச்சி பெறுவது அவசியம் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X