search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பீகார் துணை முதல்வர் சுசில் குமார் மோடி
    X
    பீகார் துணை முதல்வர் சுசில் குமார் மோடி

    பீகார் துணை முதல்வருக்கு கொரோனா பாதிப்பு- எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி

    பீகார் மாநில துணை முதல்வர் சுஷில் குமார் மோடிக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
    பாட்னா:

    இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் தொடர்ந்து அதிகரித்தவண்ணம் உள்ளது. சாமானிய மக்கள் முதல் களப்பணியில் ஈடுபட்டுள்ள தன்னார்வலர்கள், மருத்துவத் துறையினர், மக்கள் பிரதிநிதிகள் என அனைத்து தரப்பினரையும் கொரோனா தாக்கி உள்ளது. 

    இந்நிலையில், பீகார் மாநில துணை முதல்வர் சுஷில் குமார் மோடிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் பாட்னாவில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அனைத்து பரிசோதனைகளும் இயல்பாக இருப்பதாகவும், லேசான காய்ச்சல் மட்டுமே இருந்ததாகவும் கூறி உள்ள அவர், விரைவில் குணமடைந்து பிரச்சாரத்திற்கு திரும்புவதாகவும் தெரிவித்துள்ளார். 
    Next Story
    ×