என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தாராவியில் 2 போலி டாக்டர்கள் கைது
Byமாலை மலர்22 Oct 2020 8:52 AM GMT (Updated: 22 Oct 2020 8:52 AM GMT)
தாராவியில் 2 போலி டாக்டர்களை போலீசார் கைது செய்தனர்.
மும்பை:
மும்பை தாராவி நாயக்நகர், புத்தா தெரு பகுதியில் போலி டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருவதாக மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு புகார் வந்தது. இந்த புகாரின்பேரில் அதிகாரிகள் அங்கு கிளினிக் நடத்தி வந்த டாக்டரிடம் போலி வாடிக்கையாளர்களை அனுப்பி விசாரணை நடத்தினர். இதில் அவர் நோயாளிகளுக்கு முறையான சிகிச்சை அளிக்காமல் கிளினிக் நடத்தி வந்தது தெரியவந்தது.
இதையடுத்து அதிகாரிகள் தாராவி போலீசில் புகார் அளித்தனர். இந்த புகாரின் படி போலீசார் மற்றும் அதிகாரிகள் அங்கு சிகிச்சை அளித்து வந்த ராஜாராம் பைராகி (வயது48) என்பவரை பிடித்து விசாரித்தனர். மேலும் அவர் வைத்திருந்த சான்றிதழை சரிபார்த்த போது, அது போலி சான்றிதழ் என்பது தெரியவந்தது.
இதேபோல புத்தா தெருவில் கிளினிக் நடத்தி வந்த முஜூபர் ரகுமான் என்பவரையும் அதிகாரிகள் பிடித்து விசாரித்தனர். இவரும் போலி டாக்டர் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
பிடிபட்ட 2 போலி டாக்டர்களையும் தாராவி போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மும்பை தாராவி நாயக்நகர், புத்தா தெரு பகுதியில் போலி டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருவதாக மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு புகார் வந்தது. இந்த புகாரின்பேரில் அதிகாரிகள் அங்கு கிளினிக் நடத்தி வந்த டாக்டரிடம் போலி வாடிக்கையாளர்களை அனுப்பி விசாரணை நடத்தினர். இதில் அவர் நோயாளிகளுக்கு முறையான சிகிச்சை அளிக்காமல் கிளினிக் நடத்தி வந்தது தெரியவந்தது.
இதையடுத்து அதிகாரிகள் தாராவி போலீசில் புகார் அளித்தனர். இந்த புகாரின் படி போலீசார் மற்றும் அதிகாரிகள் அங்கு சிகிச்சை அளித்து வந்த ராஜாராம் பைராகி (வயது48) என்பவரை பிடித்து விசாரித்தனர். மேலும் அவர் வைத்திருந்த சான்றிதழை சரிபார்த்த போது, அது போலி சான்றிதழ் என்பது தெரியவந்தது.
இதேபோல புத்தா தெருவில் கிளினிக் நடத்தி வந்த முஜூபர் ரகுமான் என்பவரையும் அதிகாரிகள் பிடித்து விசாரித்தனர். இவரும் போலி டாக்டர் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
பிடிபட்ட 2 போலி டாக்டர்களையும் தாராவி போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X