என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
காஷ்மீரில் 5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
Byமாலை மலர்20 Oct 2020 7:33 PM GMT (Updated: 20 Oct 2020 7:33 PM GMT)
காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுண்டர் தாக்குதலில் 5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
ஸ்ரீநகர்:
தெற்கு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள ஹர்கிரிபோரா கிராமத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று மதியம் பாதுகாப்பு படையினர் காஷ்மீர் சிறப்பு பிரிவு போலீசாருடன் இணைந்து அங்கு சென்று தீவிர தேடுதல் வேட்டை நடத்தினார்கள்.
அப்போது அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். பாதுகாப்பு படையினர் பதிலடி கொடுத்தனர். பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
இதேபோல காஷ்மீரின் சோபியான் மாவட்டத்திலும் 2 பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார்கள். இதற்கிடையே, காஷ்மீரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டதை கண்டித்து போராட் டத்தில் ஈடுபட்டவர்கள் வன்முறையில் ஈடுபட்டனர்.
அவர்களை பாதுகாப்பு படையினர் தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் கலைத்தனர். மேலும் சமூக வலைதளங்களில் வதந்திகள் பரவாமல் இருக்க தற்காலிகமாக இணையதள சேவை நிறுத்திவைக்கப்பட்டு உள்ளது.
தெற்கு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள ஹர்கிரிபோரா கிராமத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று மதியம் பாதுகாப்பு படையினர் காஷ்மீர் சிறப்பு பிரிவு போலீசாருடன் இணைந்து அங்கு சென்று தீவிர தேடுதல் வேட்டை நடத்தினார்கள்.
அப்போது அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். பாதுகாப்பு படையினர் பதிலடி கொடுத்தனர். பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
இதேபோல காஷ்மீரின் சோபியான் மாவட்டத்திலும் 2 பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார்கள். இதற்கிடையே, காஷ்மீரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டதை கண்டித்து போராட் டத்தில் ஈடுபட்டவர்கள் வன்முறையில் ஈடுபட்டனர்.
அவர்களை பாதுகாப்பு படையினர் தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் கலைத்தனர். மேலும் சமூக வலைதளங்களில் வதந்திகள் பரவாமல் இருக்க தற்காலிகமாக இணையதள சேவை நிறுத்திவைக்கப்பட்டு உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X