search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    காஷ்மீர்: பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுண்டரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

    காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுண்டர் தாக்குதலில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
    ஸ்ரீநகர்:

    ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து காஷ்மீர் போலீசாருடன் இணைந்து பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டை நடத்தினர்.

    ஹக்ரிபுரா என்ற பகுதியில் தேடுதல்வேட்டை நடத்திய போது அங்கு பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினர் நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தினர். 

    இதையடுத்து, உடனடியாக பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு பாதுகாப்பு படையினர் பதிலடி தாக்குதல் நடத்தினர். பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 2 பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்டனர்.

    என்கவுண்டரில் கொல்லப்பட்ட பயங்கரவாதிகளின் பெயர்,எந்த இயக்கத்தை சேர்ந்தவர்கள் என்ற தகவல்கள் தற்போதுவரை தெரியவில்லை.  மேலும், என்கவுண்டர் நடந்த பகுதியில் இன்னும் சில பயங்கரவாதிகள் பதுங்கி இருக்கலாம் என்பதால் அப்பகுதியில் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

    முன்னதாக, நேற்று இரவு அனந்த்நாக் மாவட்டத்தில் சண்ட்புரா பகுதி போலீஸ் இன்ஸ்பெக்டரான முகமது அஷ்ரப் தனது வீட்டின் அருகே நின்றுகொண்டிருந்தபோது அங்கு வந்த பயங்கரவாதிகள் முகமது மீது துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பிச்சென்றனர். 

    தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் முகமதை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முகமது சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். 

    போலீஸ் இன்ஸ்பெக்டர் மீதான தாக்க்குதலுக்கு காஷ்மீர் கவர்னர் மனோஜ் சின்கா கண்டனம் தெரிவித்துள்ளார். 

    அதேபோல், உயிரிழந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் முகமது அஷ்ரப்பின் வீட்டிற்கு சென்ற காஷ்மீர் டிஜிபி தில்பக் சிங் மற்றும் ஐஜி விஜய் குமார் உள்ளிட்ட பாதுகாப்பு அதிகாரிகள் முகமது அஷ்ரப்பின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறினர்.
    Next Story
    ×