search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிரதமர் மோடி
    X
    பிரதமர் மோடி

    நாட்டு மக்களுடன் மாலை 6 மணிக்கு உரையாற்றுகிறார் பிரதமர் மோடி

    நாட்டு மக்களுக்கு இன்று மாலை 6 மணிக்கு முக்கிய தகவல்களை தெரிவிக்க உள்ளதாக பிரதமர் மோடி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
    புதுடெல்லி:

    இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், கொரோனா பாதிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி அவ்வப்போது உரையாற்றி வருகிறார். 

    தற்போது பருவமழை மற்றும் தீபாவளி பண்டிகை காலம் நெருங்கி வருகிறது. ஊரடங்கு தளர்வு மற்றும் பண்டிகைகாலம் போன்றவற்றால் இந்தியாவில் கொரோனாவின் 2-வது அலை பரவலாம் என்ற அச்சம் நிலவி வருகிறது.

    இந்நிலையில், நாட்டு மக்களுக்கு இன்று மாலை 6 மணியளவில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார். இது தொடர்பாக பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,’ இன்று மாலை 6 மணிக்கு எனது சக குடிமக்களிடம் ஒரு செய்தியை பகிர உள்ளேன்’ என தெரிவித்துள்ளார்.

    பண்டிகைக்காலம் நெருங்குவதால் கொரோனா பரவலை தடுக்கும் விதமாக மக்கள் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதை இன்றைய உரையில் பிரதமர் மோடி வலியுறுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
    Next Story
    ×