என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
36 முறை விதிமுறைகளை மீறியதாக வாகன ஓட்டியிடம் ரூ.18 ஆயிரம் அபராதம் வசூல்
Byமாலை மலர்20 Oct 2020 1:49 AM GMT (Updated: 20 Oct 2020 1:49 AM GMT)
பெங்களூருவில் 36 முறை விதிமுறைகளை மீறியதாக வாலிபரிடம் இருந்து ரூ.18 ஆயிரத்து 100 அபராதம் வசூலிக்கப்பட்டு இருப்பதாக பேடராயனபுரா போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர்.
பெங்களூரு :
பெங்களூரு பேடராயனபுரா போக்குவரத்து போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபரை தடுத்து நிறுத்தி ஆவணங்களை சரிபார்த்தனர். அந்த வாலிபரிடம் ஓட்டுனர் உரிமம் உள்ளிட்ட பிற ஆவணங்கள் இல்லை என்று தெரியவந்தது.
மேலும் அந்த வாலிபருடைய மோட்டார் சைக்கிள் பதிவு எண்ணை ஆய்வு செய்தபோது ஏற்கனவே 34 முறை போக்குவரத்து விதிமுறைகளை மீறி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அதாவது சிக்னலை மதிக்காமல் சென்றது, ஹெல்மெட் அணியாமல் சென்றது என 34 முறை அந்த வாலிபர் விதிமுறைகளை மீறி மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்றது தெரியவந்தது.
இதையடுத்து, ஓட்டுனர் உரிமம் இல்லாதது, பிற ஆவணங்கள் இல்லாதது என 2 வழக்குகள் பதிவு செய்ததுடன், ஏற்கனவே இருந்த 34 வழக்குகள் என ஒட்டு மொத்தமாக 36 வழக்குகளில், அந்த வாலிபரிடம் இருந்து ரூ.18 ஆயிரத்து 100 அபராதம் வசூலிக்கப்பட்டு இருப்பதாக பேடராயனபுரா போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர்.
பெங்களூரு பேடராயனபுரா போக்குவரத்து போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபரை தடுத்து நிறுத்தி ஆவணங்களை சரிபார்த்தனர். அந்த வாலிபரிடம் ஓட்டுனர் உரிமம் உள்ளிட்ட பிற ஆவணங்கள் இல்லை என்று தெரியவந்தது.
மேலும் அந்த வாலிபருடைய மோட்டார் சைக்கிள் பதிவு எண்ணை ஆய்வு செய்தபோது ஏற்கனவே 34 முறை போக்குவரத்து விதிமுறைகளை மீறி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அதாவது சிக்னலை மதிக்காமல் சென்றது, ஹெல்மெட் அணியாமல் சென்றது என 34 முறை அந்த வாலிபர் விதிமுறைகளை மீறி மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்றது தெரியவந்தது.
இதையடுத்து, ஓட்டுனர் உரிமம் இல்லாதது, பிற ஆவணங்கள் இல்லாதது என 2 வழக்குகள் பதிவு செய்ததுடன், ஏற்கனவே இருந்த 34 வழக்குகள் என ஒட்டு மொத்தமாக 36 வழக்குகளில், அந்த வாலிபரிடம் இருந்து ரூ.18 ஆயிரத்து 100 அபராதம் வசூலிக்கப்பட்டு இருப்பதாக பேடராயனபுரா போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X