என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கேரளாவில் கள்ளச்சாராயம் குடித்து 3 பேர் பலி
Byமாலை மலர்20 Oct 2020 1:12 AM GMT (Updated: 20 Oct 2020 1:12 AM GMT)
கேரளாவின் பாலக்காடு அருகே உள்ள காஞ்சிகோட் பழங்குடியினர் காலனியில் கள்ளச்சாராயம் குடித்த 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
பாலக்காடு:
கேரளாவின் பாலக்காடு அருகே உள்ள காஞ்சிகோட் பழங்குடியினர் காலனியை சேர்ந்த 3 பெண்கள் உள்பட 12 பேர் கள்ளச்சாராயம் குடித்துள்ளனர். இதில் அய்யப்பன் (வயது 52), ராமன் (52) ஆகியோர் நேற்றுமுன்தினம் உயிரிழந்தனர். உடனே 2 பேரது உடல்களும் புதைக்கப்பட்டது.
இந்தநிலையில் நேற்று காலை சிவன்(37) என்பவரும் வீட்டின் முன்பு இறந்து கிடந்தார். இந்த 3 பேருமே கள்ளச்சாராயம் குடித்தவர்கள் என்று கூறப்படுகிறது.
மேலும் 3 பெண்கள் உள்பட 9 பேரின் உடல்நிலையும் பாதிக்கப்பட்டது. உடனே அவர்களை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே இறந்த சிவனின் உடலும், புதைக்கப்பட்ட மற்ற 2 உடல்களையும் தோண்டி எடுத்து பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் கூறுகையில், ‘12 பேரும் வெள்ளைநிறத்தில் ‘பினாயில்’ வாசனையுள்ள திரவத்தை குடித்துள்ளனர். பிரேதபரிசோதனை அறிக்கை வந்தபின்னரே முழு தகவலும் வெளிவரும்’ என்று கூறினர். இதற்கிடையே போதைக்காக மதுவுடன் எரிசாராயம் அல்லது சானிடைசரை கலந்து குடித்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
கேரளாவின் பாலக்காடு அருகே உள்ள காஞ்சிகோட் பழங்குடியினர் காலனியை சேர்ந்த 3 பெண்கள் உள்பட 12 பேர் கள்ளச்சாராயம் குடித்துள்ளனர். இதில் அய்யப்பன் (வயது 52), ராமன் (52) ஆகியோர் நேற்றுமுன்தினம் உயிரிழந்தனர். உடனே 2 பேரது உடல்களும் புதைக்கப்பட்டது.
இந்தநிலையில் நேற்று காலை சிவன்(37) என்பவரும் வீட்டின் முன்பு இறந்து கிடந்தார். இந்த 3 பேருமே கள்ளச்சாராயம் குடித்தவர்கள் என்று கூறப்படுகிறது.
மேலும் 3 பெண்கள் உள்பட 9 பேரின் உடல்நிலையும் பாதிக்கப்பட்டது. உடனே அவர்களை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே இறந்த சிவனின் உடலும், புதைக்கப்பட்ட மற்ற 2 உடல்களையும் தோண்டி எடுத்து பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் கூறுகையில், ‘12 பேரும் வெள்ளைநிறத்தில் ‘பினாயில்’ வாசனையுள்ள திரவத்தை குடித்துள்ளனர். பிரேதபரிசோதனை அறிக்கை வந்தபின்னரே முழு தகவலும் வெளிவரும்’ என்று கூறினர். இதற்கிடையே போதைக்காக மதுவுடன் எரிசாராயம் அல்லது சானிடைசரை கலந்து குடித்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X