என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
முதல்வர் நாற்காலியில் ஒட்டிக்கொள்வது மட்டுமே அவரது ஒரே ஆசை... நிதிஷ் மீது தேஜஸ்வி யாதவ் பாய்ச்சல்
Byமாலை மலர்18 Oct 2020 5:56 AM GMT (Updated: 18 Oct 2020 5:56 AM GMT)
முதல்வர் நாற்காலியில் ஒட்டிக்கொள்ள மட்டுமே ஆசைப்படும் நிதீஷ் குமார் எப்படி வேலையின்மையை ஒழிப்பார்? என தேஜஸ்வி யாதவ் கேள்வி எழுப்பினார்.
பாட்னா:
பீகார் மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வருகிறது. இந்த தேர்தலை முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான ஆளும் ஐக்கிய ஜனதா தளம், பாரதிய ஜனதா கூட்டணி ஒரு அணியாகவும், எதிர்க்கட்சியான ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸ் கூட்டணி மற்றொரு அணியாகவும் சந்திக்கின்றன. முதல்கட்ட வாக்குப்பதிவு வரும் 28ம் தேதி நடைபெற உள்ள நிலையில் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது.
இந்நிலையில், எதிர்க்கட்சிகளின் முதல்வர் வேட்பாளரும் ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவருமான தேஜஸ்வி யாதவ் கூறியதாவது:-
நாற்காலியில் ஒட்டிக்கொள்வது மட்டுமே நிதீஷ் குமாரின் முதல் மற்றும் கடைசி ஆசை. அவர் எப்படி வேலையின்மையை ஒழிப்பார்? புலம்பெயர்வோர், வறுமை, பட்டினி பற்றி ஏன் அவர் பேசவில்லை? தேசிய ஜனநாயக கூட்டணியை இந்த தேர்தலில் தோற்கடிக்காவிட்டால், இதுபோன்ற பயனற்ற அரசு, வேலையற்றவர்களுக்கு எதுவும் செய்யாது என்பதை இளைஞர்கள் அறிவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X