என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தெலுங்கானாவில் பெய்த கனமழையில் கோல்கொண்டா அரண்மனை சுவர் இடிந்து விழுந்தது
Byமாலை மலர்17 Oct 2020 7:15 PM GMT (Updated: 17 Oct 2020 7:15 PM GMT)
தெலுங்கானாவில் பெய்த கனமழை காரணமாக வலுவிழந்த கோல்கொண்டா அரண்மனையின் சுவரின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்தது.
ஐதராபாத்:
தெலுங்கானாவின் தலைநகர் ஐதராபாத்தில் இருந்து 11 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது புகழ்பெற்ற கோல்கொண்டா அரண்மனை. இந்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோல்கொண்டா அரண்மனையில் தான் முதன் முதலாக வைரங்கள் கண்டறியப்பட்டதாக கூறப்படுகிறது. புகழ்பெற்ற சுற்றுலாத்தலமான இந்த அரண்மனையை கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் மகள் இவான்கா டிரம்ப் நேரில் பார்வையிட்டு சென்றார்.
இதற்கிடையே அரண்மனையில் சீரமைப்பு பணிகளை தொல்லியல் துறையினர் செய்து வந்தனர். அரண்மனையின் ஒரு பகுதி சுவர் வலுவிழந்து காணப்படுவதாக பொதுமக்கள் தெரிவித்தனர். ஆனால் இதனை அதிகாரிகள் கண்டுகொள்ள வில்லை. இதற்கிடையே கடந்த சில தினங்களாக தெலுங்கானாவில் மழை கொட்டி தீர்த்தது. ஐதராபாத் உள்பட மாநிலத்தின் பல இடங்கள் வெள்ளக்காடாக காட்சி அளித்தது. கனமழை காரணமாக வலுவிழந்த கோல்கொண்டா அரண் மனையின் சுவரின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்தது.
தெலுங்கானாவின் தலைநகர் ஐதராபாத்தில் இருந்து 11 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது புகழ்பெற்ற கோல்கொண்டா அரண்மனை. இந்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோல்கொண்டா அரண்மனையில் தான் முதன் முதலாக வைரங்கள் கண்டறியப்பட்டதாக கூறப்படுகிறது. புகழ்பெற்ற சுற்றுலாத்தலமான இந்த அரண்மனையை கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் மகள் இவான்கா டிரம்ப் நேரில் பார்வையிட்டு சென்றார்.
இதற்கிடையே அரண்மனையில் சீரமைப்பு பணிகளை தொல்லியல் துறையினர் செய்து வந்தனர். அரண்மனையின் ஒரு பகுதி சுவர் வலுவிழந்து காணப்படுவதாக பொதுமக்கள் தெரிவித்தனர். ஆனால் இதனை அதிகாரிகள் கண்டுகொள்ள வில்லை. இதற்கிடையே கடந்த சில தினங்களாக தெலுங்கானாவில் மழை கொட்டி தீர்த்தது. ஐதராபாத் உள்பட மாநிலத்தின் பல இடங்கள் வெள்ளக்காடாக காட்சி அளித்தது. கனமழை காரணமாக வலுவிழந்த கோல்கொண்டா அரண் மனையின் சுவரின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்தது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X