search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராகுல் காந்தி
    X
    ராகுல் காந்தி

    பீகார் தேர்தல்- 23ம் தேதி இரண்டு பொதுக்கூட்டங்களில் உரையாற்றுகிறார் ராகுல்

    பீகார் மாநில சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வரும் 23ம் தேதி இரண்டு பொதுக்கூட்டங்களில் பங்கேற்க உள்ளார்.
    பாட்னா:

    பீகார் மாநிலத்தில் 3 கட்டங்களாக சட்டமனற்த் தேர்தல் நடத்தப்படுகிறது. இதில் முதற்கட்ட தேர்தல் வரும் 28ம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக அரசியல் கட்சியினர் சுறுசுறுப்பாக தேர்தல் களப்பணியாற்றி வருகின்றனர். முக்கிய தலைவர்கள் பிரச்சார பொதுக்கூட்டங்களில் பங்கேற்று வாக்கு சேகரித்து வருகின்றனர். 

    இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் எம்பியுமான ராகுல் காந்தி வரும் 23ம் தேதி இரண்டு பொதுக்கூட்டங்களில் உரையாற்ற உள்ளார். ஹிசுவா மற்றும் காகல்கானில் நடைபெறும் பிரச்சார பொதுக்கூட்டங்களில் பங்கேற்று காங்கிரஸ் மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பேசுகிறார். இதற்கான ஏற்பாடுகளை மாநில காங்கிரஸ் கட்சி முழுவீச்சில் செய்து வருகிறது.

    இரண்டாம் கட்ட தேர்தல் நவம்பர் 3ம் தேதியும், மூன்றாம் கட்ட தேர்தல் 7ம் தேதியும் நடைபெறும். 3 கட்ட தேர்தல்களிலும் பதிவான வாக்குகள் நவம்பர் 10ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். 
    Next Story
    ×