என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
உ.பி.யில் பாஜக தலைவர் சுட்டுக் கொலை- அரசியல் பகை காரணமா?
Byமாலை மலர்17 Oct 2020 3:46 AM GMT (Updated: 17 Oct 2020 3:46 AM GMT)
உத்தர பிரதேசத்தில் பாஜக தலைவரை சுட்டுக் கொன்றது தொடர்பாக 2 பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்துகின்றனர்.
பிரோசாபாத்:
உத்தர பிரதேச மாநிலம் பிரோசாபாத் மண்டல பாஜக தலைவர் டி.கே.குப்தா நேற்று இரவு தனது கடையை அடைத்துவிட்டு புறப்பட்டு சென்றார். அப்போது பைக்கில் வந்த நபர்கள் திடீரென குப்தாவை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றுவிட்டனர்.
பலத்த காயமடைந்த குப்தாவை மீட்டு ஆக்ராவில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த கொலை அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. கொலையாளிகளை கைது செய்ய வலியுறுத்தி பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து, 2 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். முன்விரோதம் காரணமாக அவர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது அரசியல் பகை காரணமா? என்பது குறித்து விசாரணை நடைபெறுகிறது.
நவம்பர் 3ம் தேதி நடைபெற உள்ள துண்ட்லா இடைத்தேர்தலில் பாஜக வேட்பாளருக்கு ஆதரவாக குப்தா பிரச்சாரம் செய்த நிலையில் அவர் கொல்லப்பட்டது தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X