என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கொரோனா தடுப்பில் சிறந்து விளங்கும் 22 மாநிலங்கள்... உயிரிழப்பு தேசிய சராசரியை விட குறைவு
Byமாலை மலர்16 Oct 2020 6:13 AM GMT (Updated: 16 Oct 2020 10:41 AM GMT)
கொரோனாவால் ஏற்படும் மரணங்களில் தேசிய சராசரியை விட 22 மாநிலங்களில் குறைவான மரணங்கள் ஏற்பட்டிருப்பதாக சுகாதாரத்துறை குறிப்பிட்டுள்ளது.
புதுடெல்லி:
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வந்தாலும், நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் மக்களின் ஒத்துழைப்பு காரணமாக குணமடையும் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதேசமயம் உலக அளவில் உயிரிழப்பு மிக குறைவாக உள்ள நாடுகளில் இந்தியாவும் ஒன்று.
ஒரு மில்லியன் மக்களில் கொரோனா பாதிப்பினால் மிகக் குறைந்த அளவில் மரணம் ஏற்படும் நாடுகள் பட்டியலில் இந்தியா நீடிக்கிறது. இந்தியாவில் தற்போது ஒரு மில்லியன் மக்களில் சராசரியாக 80 பேர் உயிரிழக்கின்றனர்.
மேலும், 22 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் நோய்த்தடுப்பில் சிறப்பாக செயல்படுவதாகவும், ஒரு மில்லியன் மக்களில் ஏற்படும் மரணங்களில் தேசிய சராசரியை விட மிகக் குறைந்த இறப்புகள் பதிவாகியிருப்பதாகவும் சுகாதாரத்துறை குறிப்பிட்டுள்ளது.
இது தொடர்பான புள்ளிவிவர வரைபடத்தை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X