search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கிர்ரன் கெர்
    X
    கிர்ரன் கெர்

    கற்பழிப்பு பற்றிய சர்ச்சை கருத்தை சண்டிகர் எம்பி தெரிவித்ததாக வைரலாகும் தகவல்

    சண்டிகர் எம்பி கிர்ரன் கெர் கற்பழிப்பு பற்றிய சர்ச்சை கருத்தை தெரிவித்ததாக கூறும் தகவல் வைரலாகி வருகிறது.

    இந்தியாவில் பெண்களுக்கு எதிரான குற்ற சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகின்றன. சமீபத்திய ஹத்ராஸ் வன்கொடுமை சம்பவத்துக்கு பின் இது தொடர்பான செய்திகள் முக்கியத்துவம் பெற்று வருகின்றன.

    இந்நிலையில், சண்டிகர் மாநிலத்தை சேர்ந்த பாஜக எம்பி-யான கிர்ரன் கெர் கற்பழிப்பு இந்திய கலாச்சாரத்தை சார்ந்தது, இதனை தடுத்து நிறுத்த முடியாது என்ற சர்ச்சை கருத்தை தெரிவித்ததாக கூறும் தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

     வைரல் பதிவு ஸ்கிரீன்ஷாட்

    வைரல் பதிவுகளை ஆய்வு செய்ததில், கிர்ரன் கெர் 2018 ஆம் ஆண்டு தெரிவித்த கருத்து மாற்றப்பட்டு வலைதளங்களில் பகிரப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது. கற்பழிப்பு சம்பவங்கள் பற்றி கிர்ரன் கெர் வெளியிட்ட நீண்ட அறிக்கையில், கற்பழிப்பு சம்பவங்கள் நெடுங்காலமாக நடைபெற்று வருகிறது. 

    மனநிலை மாற்றம் கொண்ட இதை முழுமையாக நிறுத்த முடியும் என தெரிவித்து இருந்தார். இந்த கருத்து சர்ச்சையை கிளப்பும் வகையில் மாற்றப்பட்டு இருக்கிறது. அந்த வகையில் கற்பழிப்பு பற்றி பாஜக எம்பி சர்ச்சை கருத்தை தெரிவிக்கவில்லை என்பது உறுதியாகிவிட்டது.

    போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சமயங்களில் போலி செய்தி பாதிப்பு காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு இருக்கின்றன.
    Next Story
    ×