என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கேரள தங்க கடத்தல் வழக்கில் 10 பேருக்கு நிபந்தனை ஜாமீன்
Byமாலை மலர்15 Oct 2020 9:58 PM GMT (Updated: 15 Oct 2020 9:58 PM GMT)
கேரள தங்க கடத்தல் வழக்கில் 10 பேருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி என்.ஐ.ஏ. சிறப்பு கோர்ட் நீதிபதி உத்தரவிட்டார்
திருவனந்தபுரம்:
கேரளாவில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரகத்துக்கு ரூ.14 கோடியே 82 லட்சம் மதிப்பிலான 30 கிலோ தங்கம் கடத்தி வரப்பட்டது வெளிச்சத்திற்கு வந்து நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த தங்க கடத்தல் விவகாரத்தில் தூதரக முன்னாள் ஊழியர் ஸ்வப்னா சுரேஷ் உள்பட பலர் கைது செய்யப்பட்டனர். தங்க கடத்தல் சம்பவத்தில் பயங்கரவாத தொடர்பு குறித்து தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) விசாரணை நடத்தி வருகிறது. அமலாக்கத்துறை மற்றும் சுங்கத்துறை அதிகாரிகளும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில், தங்கம் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் சார்பில் என்.ஐ.ஏ. சிறப்பு கோர்ட்டில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. நேற்று அவர்களது ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணை நடந்தது. அப்போது, கைதானவர்களை ஜாமீனில் விடுவிப்பதற்கு என்.ஐ.ஏ. தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
ஜாமீன் மனுக்களை விசாரித்த சிறப்பு நீதிபதி, 10 பேருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். அதில் தலா ரூ.10 லட்சம் பிணைத் தொகை செலுத்த வேண்டும், பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும், சிறப்பு கோர்ட்டு அனுமதியின்றி மாநிலத்தை விட்டு வெளியேறக் கூடாது உள்ளிட்ட நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. 3 பேரின் ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டது.
முக்கிய குற்றவாளிகளான ஸ்வப்னா சுரேஷ் மற்றும் சாரித் ஆகியோர் தங்கள் ஜாமீன் மனுவை திரும்ப பெற்றுக் கொண்டனர்.
கேரளாவில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரகத்துக்கு ரூ.14 கோடியே 82 லட்சம் மதிப்பிலான 30 கிலோ தங்கம் கடத்தி வரப்பட்டது வெளிச்சத்திற்கு வந்து நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த தங்க கடத்தல் விவகாரத்தில் தூதரக முன்னாள் ஊழியர் ஸ்வப்னா சுரேஷ் உள்பட பலர் கைது செய்யப்பட்டனர். தங்க கடத்தல் சம்பவத்தில் பயங்கரவாத தொடர்பு குறித்து தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) விசாரணை நடத்தி வருகிறது. அமலாக்கத்துறை மற்றும் சுங்கத்துறை அதிகாரிகளும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில், தங்கம் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் சார்பில் என்.ஐ.ஏ. சிறப்பு கோர்ட்டில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. நேற்று அவர்களது ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணை நடந்தது. அப்போது, கைதானவர்களை ஜாமீனில் விடுவிப்பதற்கு என்.ஐ.ஏ. தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
ஜாமீன் மனுக்களை விசாரித்த சிறப்பு நீதிபதி, 10 பேருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். அதில் தலா ரூ.10 லட்சம் பிணைத் தொகை செலுத்த வேண்டும், பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும், சிறப்பு கோர்ட்டு அனுமதியின்றி மாநிலத்தை விட்டு வெளியேறக் கூடாது உள்ளிட்ட நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. 3 பேரின் ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டது.
முக்கிய குற்றவாளிகளான ஸ்வப்னா சுரேஷ் மற்றும் சாரித் ஆகியோர் தங்கள் ஜாமீன் மனுவை திரும்ப பெற்றுக் கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X