search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நிலநடுக்கம்
    X
    நிலநடுக்கம்

    மணிப்பூரில் 3.5 ரிக்டரில் மிதமான நிலநடுக்கம்

    மணிப்பூரில் இன்று இரவு 3.5 ரிக்டர் அளவுகோலில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.
    இம்பால்:

    மணிப்பூர் மாநிலத்தின் பிஷ்னுபூர் பகுதியில் இன்று இரவு  9.05 மணியளவில் மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டது என தேசிய புவியியல் மையம் தெரிவித்துள்ளது.

    இந்த நிலநடுக்கம் 3.5 ரிக்டர் அளவுகோலில் பதிவானது. இதனால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.
     
    கடந்த சில நாட்களாக பல்வேறு மாநிலங்களில் தொடர்ந்து நிலநடுக்கம் ஏற்பட்டு வருவது மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
    Next Story
    ×