search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மும்பை போலீஸ்
    X
    மும்பை போலீஸ்

    மகாராஷ்டிராவில் இன்று 55 போலீசாருக்கு கொரோனா

    மகாராஷ்டிராவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 55 போலீசாருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என அம்மாநில காவல்துறை தெரிவித்துள்ளது.
    மும்பை: 

    இந்தியாவிலேயே கொரோனா தொற்று பாதிப்பு மகாராஷ்டிராவில் தான் அதிக அளவு காணப்படுகிறது. கொரோனா தொற்றுக்கு எதிராக களத்தில் முன்னின்று பணியாற்றும் போலீசாரும் மகாராஷ்டிராவில் அதிக அளவில் தொற்று பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். 

    இந்நிலையில், மகாராஷ்டிராவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 55 போலீசாருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25,134 ஆக உயர்ந்துள்ளது. 
     
    இந்த ஆட்கொல்லி நோய்க்கு இன்று மேலும் 2 காவலர்கள் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 262 ஆக உயர்ந்துள்ளது. தற்போது வரை 2,130 போலீசார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    Next Story
    ×