என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
1.5 கிமீ தூரம் நீண்ட வரிசை... உலக பிரியாணி தினத்தில் பிரியாணி வாங்க குவிந்த வாடிக்கையாளர்கள்
Byமாலை மலர்11 Oct 2020 9:18 AM GMT (Updated: 11 Oct 2020 9:18 AM GMT)
உலக பிரியாணி தினத்தையொட்டி, கர்நாடகா மாநிலம் ஹோஸ்கோட்டில் உள்ள ஓட்டலில் ஒன்றரை கிலோ மீட்டர் தொலைவிற்கு பிரியாணி பிரியர்கள் வரிசையில் காத்திருந்து வாங்கினர்.
பெங்களூரு:
பெங்களூரு அருகில் உள்ள ஹோஸ்கேட் நகரில் உள்ள ஆனந்த் தம் பிரியாணி கடை மிகவும் பிரபலம். அந்த கடையில் தயாரிக்கப்படும் பிரியாணி அப்பகுதி வட்டாரத்தில் மிகவும் சுவையானது என்பதால் பெரும் கூட்டம் கூடும். மக்கள் கூட்டத்தைச் சமாளிக்க வார இறுதி நாட்களில் ஆயிரக்கணக்கான கிலோ அளவில் பிரியாணி தயார் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படும். அதிகாலையில் தொடங்கும் பிரியாணி விற்பனை சில மணி நேரங்களில் முடிவடைந்துவிடும்.
இன்று வார விடுமுறை நாள் என்பதாலும், உலக பிரியாணி தினம் என்பதாலும் பிரியாணி வாங்குவதற்காக அதிகாலை முதலே இந்தக் கடை முன் மக்கள் கூடத் தொடங்கிவிட்டனர். மக்கள் முகக்கவசத்துடன் பிரியாணி வாங்குவதற்காக நிற்கத் தொடங்கினர். நேரம் செல்லச் செல்ல கூட்டம் அதிகரித்தது. இதனால் சுமார் 1.5 கிமீ தொலைவிற்கு வரிசை நீண்டது.
இதுகுறித்து கடையின் உரிமையாளர் கூறுகையில், ‘22 ஆண்டுகளாக கடை நடத்தி வருகிறோம். நாள்தோறும் ஆயிரக்கணக்கான கிலோ அளவில் பிரியாணி செய்து விற்பனை செய்கிறோம். வார இறுதி நாட்களில், விடுமுறைகளில் இது இன்னும் அதிகரிக்கும். எங்கள் கடையில் செயற்கையான பொருட்கள், சுவைக்கு ரசாயனப் பொருட்கள் சேர்க்காமல் பிரியாணி செய்வதால் மக்கள் விரும்புகிறார்கள்’ என்றார்.
#WATCH Karnataka: People queue up at an eatery in Hoskote to buy biryani.
— ANI (@ANI) October 11, 2020
A customer says, "I came here at 4 am, but got my order at 6:30 am, as there's a long queue of about 1.5 km for biryani. The food is too delicious, it's worth the wait." pic.twitter.com/ThiT3zmEM6
இன்று அதிகாலை முதல் மக்கள் பிரியாணி வாங்குவதற்காக 1.5 கி.மீ. தொலைவுக்கும் நீளமான வரிசையில் நின்றிருந்தது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இணையதளவாசிகள் ஆதரவாகவும், எதிராகவும் கருத்துக்கள் பதிவிட்டுள்ளனர். குறிப்பாக கொரோனா காலத்தில் சமூக இடைவெளியை பின்பற்றவில்லை என்று பலர் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X