என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சாதி அரசியலை நடத்தும் காங்கிரசார்: குமாரசாமி குற்றச்சாட்டு
Byமாலை மலர்10 Oct 2020 2:01 AM GMT
கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சியினர் தற்போது சாதி அரசியலை நடத்துகிறார்கள். சாதி அரசியலை அவர்கள் குத்தகைக்கு எடுத்துள்ளனரா? என்று கர்நாடக சட்டசபை ஜனதா தளம்(எஸ்) தலைவர் குமாரசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
பெங்களூரு :
கர்நாடக சட்டசபை ஜனதா தளம்(எஸ்) தலைவர் குமாரசாமி பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சியினர் தற்போது சாதி அரசியலை நடத்துகிறார்கள். சாதி அரசியலை அவர்கள் குத்தகைக்கு எடுத்துள்ளனரா?. ஆட்சி அதிகாரம் இருக்கும்போது, எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அமைதியாக இருந்த காங்கிரசார், இப்போது தங்கள் சாதியினருக்கு தொந்தரவு கொடுப்பதாக புகார் கொடுக்கிறார்கள்.
காங்கிரசார் நேரடி அரசியல் செய்ய வேண்டும். அரசியலை திரித்து செய்ய வேண்டாம். வழக்குப்பதிவு, பணி இடைநீக்கம் செய்யும் வரை விட மாட்டோம் என்று சொல்கிறார்கள். ஆனால் இங்கு இருக்கும் மக்கள் ஒன்றும் முட்டாள்கள் அல்ல. இடைத்தேர்தல் வருவதை மக்கள் மனதில் கொண்டுள்ளனர்.
ராஜராஜேஸ்வரிநகரில் அதிகாரிகளை தவறாக பயன்படுத்தி எதிர்க்கட்சியினருக்கு தொந்தரவு கொடுக்கும் கலாசாரத்தை உருவாக்கியது யார்?. இதுகுறித்து காங்கிரஸ் தெளிவுபடுத்த வேண்டும். அதிகாரிகள் மூலம் மிரட்டும் கலாசாரம், வழக்குப்பதிவு செய்வது போன்றவை வந்ததே காங்கிரசால் தான். குறிப்பிட்ட சாதியினர் மீது தாக்குதல் நடந்தபோது காங்கிரசார் ஏன் பேசவில்லை?.
இவ்வாறு குமாரசாமி கூறினார்.
கர்நாடக சட்டசபை ஜனதா தளம்(எஸ்) தலைவர் குமாரசாமி பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சியினர் தற்போது சாதி அரசியலை நடத்துகிறார்கள். சாதி அரசியலை அவர்கள் குத்தகைக்கு எடுத்துள்ளனரா?. ஆட்சி அதிகாரம் இருக்கும்போது, எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அமைதியாக இருந்த காங்கிரசார், இப்போது தங்கள் சாதியினருக்கு தொந்தரவு கொடுப்பதாக புகார் கொடுக்கிறார்கள்.
காங்கிரசார் நேரடி அரசியல் செய்ய வேண்டும். அரசியலை திரித்து செய்ய வேண்டாம். வழக்குப்பதிவு, பணி இடைநீக்கம் செய்யும் வரை விட மாட்டோம் என்று சொல்கிறார்கள். ஆனால் இங்கு இருக்கும் மக்கள் ஒன்றும் முட்டாள்கள் அல்ல. இடைத்தேர்தல் வருவதை மக்கள் மனதில் கொண்டுள்ளனர்.
ராஜராஜேஸ்வரிநகரில் அதிகாரிகளை தவறாக பயன்படுத்தி எதிர்க்கட்சியினருக்கு தொந்தரவு கொடுக்கும் கலாசாரத்தை உருவாக்கியது யார்?. இதுகுறித்து காங்கிரஸ் தெளிவுபடுத்த வேண்டும். அதிகாரிகள் மூலம் மிரட்டும் கலாசாரம், வழக்குப்பதிவு செய்வது போன்றவை வந்ததே காங்கிரசால் தான். குறிப்பிட்ட சாதியினர் மீது தாக்குதல் நடந்தபோது காங்கிரசார் ஏன் பேசவில்லை?.
இவ்வாறு குமாரசாமி கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X