என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
உயிரை உறைய வைத்த மலைப்பாதை விபத்து... அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய போலீசார்
Byமாலை மலர்8 Oct 2020 11:19 AM GMT (Updated: 8 Oct 2020 11:19 AM GMT)
உத்தரகாண்ட் மாநிலம் கெம்டி நீர்வீழ்ச்சி அருகே இந்தோ-திபெத் எல்லை காவல் படையினர் சென்ற பேருந்து விபத்துக்குள்ளானது.
முசோரி:
இந்தோ திபெத்திய எல்லை காவல் படையைச் சேர்ந்த போலீஸ்காரர்கள், உத்தரகாண்ட் மாநிலம் முசோரி அருகே இன்று பேருந்தில் சென்றுகொண்டிருந்தனர். குறுகிய வளைவுகளைக் கொண்ட சாலையில் சென்றபோது பேருந்து திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது. தாறுமாறாகச் சென்ற பேருந்து, வளைவில் உள்ள ஒரு கட்டிடத்தின் மீது மோதி நின்றது. கெம்ட் நீர்வீழ்ச்சி அருகே இந்த விபத்து ஏற்பட்டது.
பேருந்தின் முன்பகுதி அந்தரத்தில் தொங்கியபடி இருந்தது. உள்ளே இருந்த வீரர்கள் ஒரு நிமிடம் அப்படியே உறைந்துபோயினர். பின்னர் சுதாரித்த அவர்கள், பேருந்தில் இருந்து லாவகமாக கீழே இறங்கினர். இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. பேருந்து கொஞ்சம் அதிக வேகத்தில் வந்திருந்தால் ஆழமான பள்ளத்தாக்கில் விழுந்து உயிர்ப்பலி ஏற்பட்டிருக்கும்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X