என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அனைத்து விதமான முககவசம் ஏற்றுமதிக்கு கட்டுப்பாடுகள் நீக்கம் - மத்திய அரசு நடவடிக்கை
Byமாலை மலர்6 Oct 2020 8:36 PM GMT (Updated: 6 Oct 2020 8:36 PM GMT)
அனைத்து விதமான முககவசங்கள் மற்றும் கவச உடைகளுக்கு விதிக்கப்பட்டு இருந்த ஏற்றுமதி கட்டுப்பாடுகளை மத்திய அரசு நேற்று நீக்கியது.
புதுடெல்லி:
கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் முககவசம், கவச உடைகளின் தேவை அதிகரித்ததால், என்-95 உள்ளிட்ட முககவசம், கவச உடைகள் ஏற்றுமதிக்கு மத்திய அரசு கட்டுப்பாடுகள் விதித்து இருந்தது. ஆனால் தற்போது உள்நாட்டு சந்தையில் போதிய அளவுக்கு வரத்து இருப்பதால் அனைத்து விதமான முககவசங்கள் மற்றும் கவச உடைகளுக்கு விதிக்கப்பட்டு இருந்த ஏற்றுமதி கட்டுப்பாடுகளை மத்திய அரசு நேற்று நீக்கியது.
இது தொடர்பாக வெளிநாட்டு வர்த்தக இயக்குனரக ஜெனரல் அறிவிப்பு ஒன்று வெளியிட்டு உள்ளார். மேற்படி முககவசங்கள் மற்றும் கவச உடைகளை வெளிநாடுகளில் விற்பதற்கு அனுமதிக்கப்படுகிறது என அதில் அவர் குறிப்பிட்டு இருந்தார். இதன் மூலம் உள்நாட்டு தொழிற்சாலைகள் பயன்பெறும்.
இந்த நடவடிக்கை குறித்து மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை மந்திரி பியூஷ் கோயல் தனது டுவிட்டர் தளத்தில், ‘உலகிற்காக இந்தியா உருவாக்குகிறது: என்-95 மற்றும் எப்.எப்.பி.2 முககவசங்கள் தற்போது உலகம் முழுவதும் தாராளமாக ஏற்றுமதி செய்யலாம்’ என்று குறிப்பிட்டு இருந்தார்.
கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் முககவசம், கவச உடைகளின் தேவை அதிகரித்ததால், என்-95 உள்ளிட்ட முககவசம், கவச உடைகள் ஏற்றுமதிக்கு மத்திய அரசு கட்டுப்பாடுகள் விதித்து இருந்தது. ஆனால் தற்போது உள்நாட்டு சந்தையில் போதிய அளவுக்கு வரத்து இருப்பதால் அனைத்து விதமான முககவசங்கள் மற்றும் கவச உடைகளுக்கு விதிக்கப்பட்டு இருந்த ஏற்றுமதி கட்டுப்பாடுகளை மத்திய அரசு நேற்று நீக்கியது.
இது தொடர்பாக வெளிநாட்டு வர்த்தக இயக்குனரக ஜெனரல் அறிவிப்பு ஒன்று வெளியிட்டு உள்ளார். மேற்படி முககவசங்கள் மற்றும் கவச உடைகளை வெளிநாடுகளில் விற்பதற்கு அனுமதிக்கப்படுகிறது என அதில் அவர் குறிப்பிட்டு இருந்தார். இதன் மூலம் உள்நாட்டு தொழிற்சாலைகள் பயன்பெறும்.
இந்த நடவடிக்கை குறித்து மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை மந்திரி பியூஷ் கோயல் தனது டுவிட்டர் தளத்தில், ‘உலகிற்காக இந்தியா உருவாக்குகிறது: என்-95 மற்றும் எப்.எப்.பி.2 முககவசங்கள் தற்போது உலகம் முழுவதும் தாராளமாக ஏற்றுமதி செய்யலாம்’ என்று குறிப்பிட்டு இருந்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X